You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palவெற்றிகரமாக க்ரைம் படங்களை இயக்கி கொண்டிருக்கும் இளம் திரைப்பட இயக்குநர் பிரசன்னாவும் இளம் தொழில் அதிபர் கிருஷ்ணசந்தருக்கும் ஒரு விபரீதமான சவாலில் இறங்குகிறார்கள்.
கொலை செய்பவர்கள் எப்படியும் சிறு தவறாவது செய்து போலீசில் சிக்கிக் கொள்வார்கள்..என்பது பிரசன்னாவின் வாதம்
போலீசில் மாட்டிக்கொள்பவர்கள் தவறை தவறாக செய்பவர்கள். அதனால், நான் ஒரு கொலை செய்கிறேன். அதிலில் இருந்து எப்படி தப்பிக்கிறேன் என்பதை பார் - இது கிருஷ்ணசந்தரின் எதிர்வாதம்.
இதைக் கேட்டதும் அதிர்கிறான் பிரசன்னா. முதலில் தயங்குபவன் பிறகு கிருஷ்ணசந்தர் தோற்றால் அவன் சொத்தை தருவதாக சொன்னதும் ஒப்புக்கொள்கிறான்.
இதற்குபின் , கிருஷ்ணசந்தர் இந்த பந்தயத்தை வெல்ல திட்டம் தீட்டுகிறான். அந்த திட்டம் என்ன ? யாரை கொலை சய்ய முடிவெடுக்கிறான்? பரபரவென நகரும் கதைக்களம் உங்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வரும்.
சிறப்பு செய்தி - விவேக்கும் ரூபலாவும் துப்பறியும் அதிரடி கதை இது.
It looks like you’ve already submitted a review for this book.
Write your review for this book (optional)
Review Deleted
Your review has been deleted and won’t appear on the book anymore.ராஜேஷ்குமார்
ஆர்.கே. என்னும் இந்த இரண்டு எழுத்துக்களுக்குள் அடங்கியிருக்கும் ராஜேஷ்குமார் என்னும் எழுத்தாளர் 1969ம் ஆண்டு தன்னுடைய 21 வயதில் எழுத ஆரம்பித்து 2019ல் தன்னுடைய எழுத்துலக வாசத்தின் 50வது ஆண்டாய் முடித்துக் கொண்டு இன்னமும் எழுதிக்கொண்டு இருப்பவர்.
1947-ம் ஆண்டு மார்ச் 20ம் தேதி பிறந்த இவர்க்கு பெற்றோர் இட்ட பெயர் ராஜகோபால். தாத்தாவின் பெயரான குப்புசாமியையும், அப்பாவின் பெயரான ரங்கசாமியையும் தன்னுடைய பெயரோடு இணைத்துக்கொண்டதின் காரணமாய் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சக மாணவர்களால் கே.ஆர் என்று அழைக்கப்பட்டவர்.
பி.எஸ்ஸியில் தாவரவியலையும் பி.எட்டில் நேச்சுரல் சயின்ஸையும் முடித்து ஐந்தாண்டு காலம் ஆசிரியராய் பணி புரிந்த பிறகு அந்தப் பணியை ராஜினாமா செய்துவிட்டு அப்பாவுடன் இணைந்து கைத்தறிச்சேலை வியாபாரத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர். அதை கவனித்தபடியே கதைகள் எழுதியவர். 1973 முதல் 1980 வரை தன்னுடைய வியாபார விஷயமாக மாதம் ஒரு முறை இந்தியாவின் வடமாநில நகர்களுக்கு சென்று வந்ததின் விளைவாகவும் பலதரப்பட்ட மக்களையும், நிகழ்வுகளையும் சந்தித்ததின் பயனாகவும் பல கதைகள் அவர் மனதிலே உருவாகி சிறுகதைகளாகவும், நாவல்களாகவும் பல்வேறு நாளிதழ்களிலும் வார இதழ்களிலும் வெளிவந்தது.
The items in your Cart will be deleted, click ok to proceed.