You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palஇரட்டைமலை சீனிவாசன் அவர்கள், சமூக நீதி முன்னோடி ஆவார். திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் (1860-1945) அவர்களின் வாழ்க்கை மற்றும் பாரம்பரியத்தை விவரிக்கும் ஒரு நூல் ஆகும். சாதிய வேறுபாடு மற்றும் தொடக்கூடாத தீண்டாமை நிரம்பிய காலகட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த அவர், கல்வி, மற்றும் சமுதாய சேவை பணிகள் மூலம் எல்லா தடைகளையும் மீறி, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடிய மிக முக்கிய சமூகசீர்திருத்தவாதியாக உயர்ந்தார்.
தென் ஆப்பிரிக்காவில் மகாத்மா காந்தியுடன் இணைந்து பணியாற்றியதும், அவரை தமிழைக் கற்கச் செய்ததும், வரலாறாகும். 15வருடம் சட்ட சபை உறுப பினராக இருந்த போது முதன் முதலாக தீண்டாமை ஒழிப்பு சட்டம் 1924ல் அமலாக்கினார் லண்டன் வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொண்டு தீண்டாமை பற்றி ஐந்தாம் ஜார்ஜ் மன்னருக்கு ஆணித்தரமாக புரிய வைததார். டாக்டர் பி.ஆர்.அம்பேத்கருடன் இணைந்து, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வாக்குச்சீட்டு உரிமையும், இடஒதுக்கீடும் கிடைக்கச் செய்ததில் இவர் முக்கிய பங்காற்றினார். ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காக அவர் மேற்கொண்ட தியாகங்களையும் தாக்கங்களையும் இப்புத்தகம் விளக்குகிறது.
It looks like you’ve already submitted a review for this book.
Write your review for this book (optional)
Review Deleted
Your review has been deleted and won’t appear on the book anymore.டாக்டர். நிர்மலா
டாக்டர் நிர்மலா அருள்பிரகாஷ் அவர்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குடும்ப மரபினை சேர்ந்தவர். ஐயோத்திதாச பண்டிதர் (1845-1914), மற்றும் திவான் பகதூர் இரட்டையமலை சீனிவாசன் (1860-1945), ஆகியோரின் கொள்ளுப்பேத்தி ஆவார். இவரது தாத்தா, சி.ஐ. பட்டாபிராமன் (ஐயோத்திதாச பண்டிதரின் மகன்) சுதந்திர போராட்ட வீரராவார்.
டாக்டர் நிர்மலா அருள்பிரகாஷ், சென்னை எதிராஜ் மகளிர் கல்லூரியில் இளநிலை, முதுநிலை. எம்.பில்.. மற்றும் பி.எச்.டி. பட்டங்களை பெற்றுள்ளார். பல்துறை திறமை கொண்ட இவர் வீட்டுத்தலைவி, சிறந்த பேச்சாளர், ஆங்கிலம் மற்றும் தமிழில் தேர்ச்சியுடன் எழுதும் எழுத்தாளர். தொழிலதிபர், சமூக ஆர்வலர் மற்றும் அரசியல்வாதி ஆவார். இலக்கிய மற்றும் சமூக பணிகளுக்காக பல விருதுகளை பெற்றுள்ளார். 6-6-2024 அன்று, தமிழக கவர்னர், திரு.ஆர். என். ரவி அவர்கள், எழுத்தாளருக்கான விருதை இவருக்கு வழங்கினார். சிறுவயதிலிருந்தே சமூக சேவையில் ஈடுபட்ட இவர், சீனா போருக்கான நிவாரண நிதிக்காக தனது தங்க மோதிரத்தை பள்ளியில் வழங்கியவர்.
இவர், தேசிய மகளிர் ஆணையம், அன்னை தெரசா பல்கலைக்கழகம் மற்றும் இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் போன்ற பல முக்கிய நிறுவனங்களில் உறுப்பினராவார்.
முற்போக்கு பேச்சாளர் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளராக, தேசிய மற்றும் சர்வதேச மாநாடுகளில் பங்கேற்றுள்ளார். ஜூன் 1993 ஆம் ஆண்டில், ஆஸ்திரியாவின் வியன்னாவில் நடைபெற்ற உலக மனித உரிமை மாநாட்டில், 'தீண்டாமை சாதிய அமைப்பு மற்றும் கொத்தடிமை' பற்றிய குழுவின் தலைவராக அரசு சாரா அமைப்பின் சார்பில் பங்கேற்றார்.
கல்வி, சமூக செயற்பாட்டாளர் மனித உரிமை மற்றும் மகளிர் முன்னேற்றம் குறித்து இவரின் பங்களிப்பு, இன்னும் பலருக்கு ஊக்கமாகவும் உத்வேகமாகவும் திகழ்கிறது.
The items in your Cart will be deleted, click ok to proceed.