Share this book with your friends

Anbana Purithal / அன்பான புரிதல் சிறுகதைகள்

Author Name: Anbudan Miththiran | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

சிறுகதைகள் தானே என்று கடந்து செல்ல முடியாது. சிறுகதைகள் மனிதனில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியவை. எனக்கு எழுதுவதில் ஆர்வம் ஏற்பட காரணமாக இருந்தவை சிறுகதைகள் தான் என்றால் அதில் ஐயமில்லை. 

கற்காலம் முதல் மனித நாகரீகம் வளர்ச்சி பெற தொடங்கிய காலம் தொடங்கி இன்று வரை மனித சமுதாயத்தில் சிறுகதைகள் ஏற்படுத்திய தாக்கங்களுக்குக் குறைவில்லை. மனித நாகரீக வளர்ச்சியில் சிறுகதைகள் ஆற்றிய பங்களிப்பு அளப்பதற்கு அரியது. 

பகுத்தறிவு, பக்தி, அறிவியல், ஞானம், சிந்தனை, பண்பாடு, கலாச்சாரம் என்று பல பரிணாமங்களில் சிறுகதைகளின் பங்களிப்பு மிக அதிகம். கலை உலகின் தொடக்கம் சிறுகதை தான். மனித சமுதாயத்திற்கு பல நல்ல கருத்துக்களை எளிமையாக அடித்தள மக்களும், பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் கொண்டு சேர்த்த பெருமை சிறுகதைகளையே சாரும்.

சிறுபிள்ளையாக இருந்தபோது நாம் சாப்பிடுவதக்காக நிலவில் ஒரு பாட்டி வடை சுடுவதாக அம்மா சொல்லிய சிறுகதைகள் தொடங்கி பள்ளிக்கூடத்தில் காகத்திற்கு தாகம் எடுத்ததால் குடிக்க தண்ணீர் தேடியபோது குடத்தின் அடியில் தண்ணீர் கிடப்பதை கண்டு அது மேலே வர, குடத்திற்குள் கற்களைப் போட்டுத் தண்ணீரை மேலே கொண்டு வந்து அதைப் பருகித் தன் தாகத்தை தீர்த்துக் கொண்ட கதைவரை எல்லாம் சிறுகதைகள் தானே நம்மில் விதைக்கப்பட்டு நாம் முழு மனிதர்களாக உருவாகக் காரணமாகி உள்ளன. 

இந்தச் சிறுகதை தொகுப்பில் தொகுத்து வழங்கபட்டுள்ள சிறுகதைகள் நம் வாழ்க்ககைக்கு தேவையான பல கருத்துகளை உங்களுக்குப் பயன்படும் வகையில் உள்ளன என்பதை உங்களிடம் உறுதியளிக்கிறேன். படித்துப் பயனடையுங்கள் எனதன்பு சகோதர, சகோதரிகளே...

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

அன்புடன் மித்திரன்

அன்புடன் மித்திரனின் பிறந்த பெயர் சிவனணைந்த பெருமாள் தி. அவரது தந்தையின் பெயர் திரவியம் வே. அவரது தாயின் பெயர் கற்பகம் தி. அன்புடன் மித்திரன் மார்ச் 3, 1996 இல் பிறந்தார். அவர் கிருஷ்ணர் மற்றும் சிவபெருமானின் பக்தர். அவர் ஒரு சிந்தனையாளர், ஞானத்தை நேசிப்பவர், சமூக சீர்திருத்தவாதி.
  அன்புடன் மித்திரன் பொருளாதார ரீதியாக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார். இவரது சொந்த கிராமம் தமிழ்நாட்டின் புளியங்குடி அருகே உள்ளது. அவர் தனது குழந்தைப் பருவத்திலிருந்தே தூய்மையான அன்பைத் தேடியுள்ளார். அது அவரை ஒரு எழுத்தாளராக்கியது.

Read More...

Achievements

+2 more
View All