என் பெயருக்கு பதில் நான் செய்ததை சொல்கிறேன். சென்னையில் டெட் மஸ்கிட்டோஸ் என்ற பெயரில் தொடர்கொலைகள் செய்தேன். நான் சிலரை கொன்று, புகைப்படமாக்கி, அதை கவரில் போட்டு, காவல்துறைக்கு புறா மூலம் தூது அனுப்பினேன். காவல்துறை தன் கடமையை செய்ய என்னைப்பற்றி விசாரித்தார்கள். மறுபக்கம் கதாநாயகன் நான் செய்த கொலைகளை வைத்து டெட் மஸ்கிட்டோஸ் என்ற பெயரில் தொடர்கதை எழுதினான். ஒரு பக்கம் விக்ரமனும் மறுபக்கம் கதாநாயகனும், நான் யார்? எங்கு இருக்கிறேன்? என்று தேடி அலைந்தார்கள். ஆனால் நான் எங்கு இருக்கிறேன் என்று எனக்கு மட்டுமே தெரியும்.
சொல்லப்போனால் கடைசி அத்தியாயத்தில் ஒளிந்திருக்கிறேன், முடிந்தால் படித்து என்னை பிடித்துக் கொள்ளுங்கள்.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners