பாழான நிலையிலுள்ள ஆற்றின் சரிவில் வளர்ந்து நிற்கும் புற்களுக்கிடையிலே நான் அவளைக் கேட்டேன்,“பெண்ணே, உன் விளக்கை திரையிட்டு மறைத்துக் கொண்டு எங்கே செல்கிறாய்? என் வீடு இருளில் தனிமையின் சோகத்தில் இருக்கிறது. உன் விளக்கை எனக்கு இரவலாகக் கொடு” அவள் தன் ஒளியற்ற கண்களை ஒரு கணம் உயர்த்தி இருளில் என் முகத்தைப் பார்த்தாள்.
அவள் சொன்னாள், “பகற்பொழுது மேற்கிலே மறைகின்ற நேரம் நீரிலே என் விளக்கை மிதக்கவிட ஆற்றிற்கு வந்திருக்கிறேன்” வளர்ந்து நிற்கும் புற்களுக்கிடையில் நான் தனியாக நின்று கொண்டு, மெலிதாய் எரிகின்ற அவள் விளக்கு எந்தப் பயனும் இல்லாமல் நீரோட்டத்தில் செல்வதைப் பார்க்கிறேன்……
பாடல் 63
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners