இந்தியர்கள் மறந்தது சில, நம்மிடமிருந்து மறைக்கப்பட்டது பல. இந்த மண்ணில் பிறந்ததற்காக பெருமைப்படும் பல அம்சங்களை இந்தத் தொகுப்பில் அழுத்தம் திருத்தமாக பதிந்திருக்கிறேன்.
நான் இதுவரை வரலாற்று ரீதியாக படித்து அறிந்த வரலாற்று உண்மையையே இந்த புத்தகத்தில் தொகுத்து வழங்கி உள்ளேன்.
நமது பாரதத்தின் மறைக்கப்பட்ட வரலாற்றை அறிந்துகொள்ள நான் இந்தியாவின் பல பகுதிகளுக்கு, பல கோவில்களுக்கு சென்று ஆராய்ந்து உள்ளேன்.
பாரத தேசத்தின் பழமைமிகு வரலாற்றை நீங்கள் ஓரளவேனும் தெரிந்துகொள்ள வேண்டுமானால், நம் பழம்பெரும் கோவில்களுக்கு செல்லுங்கள்.. அங்குதான் அவை கற்சிலைகளாகவும், கல்வெட்டுகளாகவும், கற்தூண்களிலும், கள்சுவற்றிலும் காணக்கிடைக்கிறது.
இந்த புத்தகத்தில் , வரலாற்றில் ஆழமாக மூழ்கி, நாட்டின் மறைக்கப்பட்ட வரலாற்றை ஆராய உதவும் தொகுப்புகளை வழங்கியுள்ளேன். கடந்த காலங்கள், கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் கடந்த கால தவறுகளைப் பற்றி வரலாறு நமக்குக் கற்பிக்கிறது, அப்போதுதான் நாம் கற்றுக்கொள்ளவும் மேம்படுத்தவும் முடியும், ஆனால் இதுவரை நமதுபள்ளி கல்லூரிகளின் வரலாற்று புத்தகங்களில் நமது பாரத தேசத்தின் பெருமைமிகு வீரம், காதல், விஞ்ஞானம், கணிதம், அறிவியல், புள்ளியியல், பொறியியல், மேலாண்மை, போன்ற வரலாற்றை நம் முன்னோர் ஆட்சியாளர்கள் திட்டமிட்டு மறைத்தே வந்துள்ளனர் என்பதற்கு இப்புத்தகம் ஒரு சாட்சியாகும்.
இந்நிலை மாறி மேற்சொன்ன நம் பாரதத்தின் பெருமைமிகு வரலாற்றை இனி வரும் சந்ததியினருக்கு போதிப்போம். பாரதத்தை போற்றுவோம்.
ராசா துரியன் வழக்கறிஞர்.