Share this book with your friends

Iruthippor - Mannavan Oruvan / இறுதிப்போர் - மண்ணவன் ஒருவன் பாகம் 1 / Vol 1

Author Name: Amirtharaj Selvaraj | Format: Paperback | Genre : Comics & Graphic Novels | Other Details

ஒரு இளைஞன் தன் கண்ணால் காணும் பொருள்முதல்வாத உலகத்திற்காக வாழ்வதுதான் வாழ்க்கை என்று நினைத்து கொண்டிருக்கும் பொழுது விண்ணுலகில் இருந்து பேராற்றல் கிடைத்தால் என்ன ஆகும்?

அவன் வாழ்க்கையின் காரணத்தை உணர்வானா? மூடநம்பிக்கை என்று அவன் நினைத்த கதைகள் உண்மை என்று உணர்ந்தால் என்ன ஆகும்?

இதுவரை இந்த உலகம் காணாத ஒரு போர். மனிதர்களின் ஒரே நம்பிக்கை அவன் ஒருவன்தான். இது அவனுடைய வாழ்க்கைப் பயணம். இருள் சூழும் மண்ணகத்தை காரிருளில் இருந்து அவன் காப்பாற்றமுடியுமா எனும் கேள்விக்கு அவனுடைய வாழ்க்கை எழுதப் போகும் விடை.

முன்னோர்கள் கூறிய கதையில் அவர்கள் தேடிக்கொண்டிருக்கும் மண்ணவன் ஒருவன் தான்தானா எனும் ஏகனின் ஐயம் திருமா?

போராடாமல் எதற்கும் விடை கிடைக்காது. எங்களோடு இணைந்து நீங்களும் போரிடுங்கள். இறுதிப்போர் உங்களை புதிய ஒரு உலகுக்கு அழைத்துச் செல்லும். காலம் மாறினாலும், உலகங்கள் மாறினாலும், மனிதரின் இன்பம், துன்பம், கோபம், காதல், வியப்பு என்றுமே மாறாது என்று காண்போம். காரகர்களுக்கும் விண்ணவருக்கும் நடுவில் நடக்கும் இந்தப் போரில் நாமும் இணைவோம்.

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

அமிர்தராஜ் செல்வராஜ்

அமிர்தராஜ் செல்வராஜ், ராஜம் குழமத்தின் இயக்குநராகவும், தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் திகழ்கிறார். பொறியாளராய் இருந்து அரசியல் தலைவராய் மாறியவர். அனைத்திந்திய காங்கிரஸ் இளைஞர் அணித் தலைவராய் விளங்கியவர். தூத்துக்குடி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகிக்கிறார். கதைகளின் மீது பெருங்காதல் கொண்ட அமிர்தராஜ் இந்த வரைபட புதினத்தை ஆங்கிலத்தில் இயற்றினார். குழந்தைகள் மட்டுமல்லாமல் பதின்மவயதினரும் இளைஞர்களும் சுவைக்கும் வண்ணம் கதைகள் படைப்பதே இவர் களவு. குவீன்ஸ்லாந்து ஸ்டூடியோஸ் எனும் நிறுவனத்தை இது போன்ற கதைகள் மற்றும் அனிமேஷன் தொடர்களை உருவாக்கத் தொடங்கியுள்ளார்.

கார்க்கி, தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர் மற்றும் உரையாடல் ஆசிரியர் ஆவார். ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களும், எந்திரன், பாகுபலி போன்ற பெரும் படங்களுக்கு வசனங்களும் எழுதியுள்ளார். தன் கார்க்கி ஆராய்ச்சி நிறுவலாம் மூலமாக தமிழ் தொடர்பான பல ஆராய்ச்சிகளைச் செய்து வருகிறார். ஐபாட்டி எனும் குழந்தைகளுக்கான மொழி விளையாட்டுக்கள், பாடல்கள் மற்றும் கதைகள் உருவாக்கியுள்ளார். இறுதிப்போர் வரைபட புதினாத்தைத் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார்.

Read More...

Achievements

Similar Books See More