பாண்டி குடும்பம் ,எழுத்தாளர் தீபா செண்பகம் அவர்களால் ,மதுரை வட்டார வழக்கில் இணையத்தில் எழுதப்பட்ட தொடர் . ஒரு பெரிய கூட்டுக் குடும்பத்தின் வாழ்வியலை , நான்கு தலைமுறை கதாபாத்திரங்களோடு, விவரிக்கும் முழு நீள குடும்ப சித்திரம் பாகங்களாகத் தொடர்கிறது. இந்த தொடர்களைத் தனிக் கதைகளாகவும் வாசிக்கலாம்.
பாண்டி குடும்பம் in …மனச தாடி என் மணிக்குயிலே, தான்வி கல்யாண வைபோகமே , மயக்கம் தீர்க்க வாராய் பைங்கிளியே, ராகம் தேடும் வானம்பாடிகள் ஆகியவை, இணைய புத்தகமாக உள்ளது.
முதல் கதை, மனச தாடி மணிக்குயிலே , பாண்டி குடும்பத்தின் பெண்மகள் கதை நாயகி பூங்குயிலின் முதல் திருமணம் தோல்வியில் முடிகிறது. குடும்பத்தினர் அதிரடியாக , நாயகன் செல்வமணிக்கு மறுமணம் செய்து வைக்கிறார்கள். அந்த வாழ்வில் அவர்களுடைய தயக்கங்கள், பிரச்சனைகள் அதை எப்படிக் கையாள்கிறார்கள் என்பதே கதை. தற்போது அச்சு புத்தகமாக வெளியிடப்படுகிறது.