மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக் கனியும் முதலில் கசக்கும் பிறகு இனிக்கும் என்பார்கள். இதை எல்லோரும் அறிந்திருக்கிறோம் ஆனால் அனுபவித்தவர்கள் ஒரு சிலரே. இந்த நூலில் எடுத்தாளப்பட்டுள்ள பழமொழிகள் காலங்காலமாகப் பேசப்பட்டு வந்தவைகளே தவிர, புதியதாக எதையும் இங்குப் பதிவிடவில்லை. இந்தப் பழமொழிகளைக் குறித்து எத்தனையோ அறிஞர்கள் வெவ்வேறு கோணத்தில் விளக்கியிருக்கிறார்கள். ஒரே பழமொழிக்கு மாறுபட்ட கோணத்தில் ஆய்வு செய்து தங்கள் கருத்துக்களை ஆழமாகப் பதிவிட்டிருக்கிறார்கள். எத்தனையோ மொழி வல்லுநர்கள், இந்தப் பழமொழிகள் நம் தாய்மொழியாம் தமிழுக்கு வலு சேர்த்திருப்பதை ஆதாரங்களுடன் நிறூபித்துள்ளார்கள். ஆய்வு மாணவர்கள் தங்களுடைய மொழி ஆய்வுக்கு இந்தப் பழமொழிகளைக் கையாண்டுள்ளனர். எத்தனையோ பேர் களப்பணிச் செய்து புதைந்து கிடந்த பழமொழிகளைத் தொகுத்து தமிழ் கூறும் நல்லுலகத்துக்குப் படைத்துள்ளனர். இன்று ஆயிரக்கணக்கான பழமொழிகள் உலா வருகின்றன. இந்த உன்னதப் பணியில் என்னுடைய சிறிய முயற்சிதான் இந்த தொகுப்பு நூல். இதில் எடுத்தாளப்பட்டுள்ள பழமொழிகளுக்கு என் கோணத்தில் விளக்கங்கள் சொல்லப்பட்டிருக்கிறது.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners