சோழ வள நாட்டின் நடுநாடு என்று அழைக்கப்படும் விழுப்புரம் மாவட்டத்தில்
கம்ப ராமாயணத்தை இயற்றி கம்பனி வளர்ந்த ஊரும் கம்பனை வளர்த்த புகழ்மிக்க வள்ளலான சடையப்ப வள்ளல் வாழ்ந்த ஊரும், சிவஞான போதம் அருளிய மெய்கண்ட தேவர் வாழ்ந்து ஜீவா சமாதி முடிந்த ஊரும், சுந்தரரின் திருமணத்தை நிறுத்தி ஆட்கொண்டு தேவாரத்தில் முதல் பத்து பாடல்களை பாட வைத்த எம்பெருமான் ஈசன் குடிகொண்ட சைவத்திரு திருவெண்ணெய்நால்லூரில் பிறந்தவன் நான் . கம்பன் வீட்டு கட்டு திரியும் கவிபாடும் என்ற உவமை நிச்சயம் எங்கள் ஊரில் உள்ள பெரும்பாலோர் கவிஞர்கள் என்பதால் அது நிதர்சனம்.