இரட்டைமலை சீனிவாசன் அவர்கள், சமூக நீதி முன்னோடி ஆவார். திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் (1860-1945) அவர்களின் வாழ்க்கை மற்றும் பாரம்பரியத்தை விவரிக்கும் ஒரு நூல் ஆகும். சாதிய வேறுபாடு மற்றும் தொடக்கூடாத தீண்டாமை நிரம்பிய காலகட்டத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த அவர், கல்வி, மற்றும் சமுதாய சேவை பணிகள் மூலம் எல்லா தடைகளையும் மீறி, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடிய மிக முக்கிய சமூகசீர்திருத்தவாதியாக உயர்ந்தார்.
தென் ஆப்பிரிக்காவில் மகாத்மா காந்தியுடன் இணைந்து பணியாற்றியதும், அவரை தமிழைக் கற்கச் செய்ததும், வரலாறாகும். 15வருடம் சட்ட சபை உறுப பினராக இருந்த போது முதன் முதலாக தீண்டாமை ஒழிப்பு சட்டம் 1924ல் அமலாக்கினார் லண்டன் வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொண்டு தீண்டாமை பற்றி ஐந்தாம் ஜார்ஜ் மன்னருக்கு ஆணித்தரமாக புரிய வைததார். டாக்டர் பி.ஆர்.அம்பேத்கருடன் இணைந்து, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு வாக்குச்சீட்டு உரிமையும், இடஒதுக்கீடும் கிடைக்கச் செய்ததில் இவர் முக்கிய பங்காற்றினார். ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காக அவர் மேற்கொண்ட தியாகங்களையும் தாக்கங்களையும் இப்புத்தகம் விளக்குகிறது.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners