 
                        
                        "சிந்தனைத் தீ" என்று இப்புத்தகத்தின் தலைப்பு அமைந்ததற்கான காரணம்... உலகில் ஒவ்வொரு மனிதர்களும் அவர்களது வாழ்க்கையில் ஒவ்வொரு விதமானப் போராட்டங்களை சந்தித்து கொண்டுத்தான் இருக்கின்றர்கள் . அவர்கள் வாழ்வில் ஏதாவது ஒரு வெற்றிப்பாதையை நோக்கி செல்ல மாட்டோம என்ற கனவோடுதான் அவர்கள் விடியலும் விடிகின்றன ஆம் நம் அனைவரின் கனவுகளும் அதுதான்,         இப்புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு கவிஞர்களின் வாழ்விலும் பல பல போராட்டங்களுக்கு மத்தியில் , ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணங்களும் , பல லட்சியங்களும் இருக்கும். சிலருக்கு இவை அனைத்தும் ஒரு புத்தகத்தில் தன் எழுதுக்கோளினால் வெளிப்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளாகவே  இருக்கும்.
அப்படிப்பட்ட எழுத்தாளர்கள் இப்புத்தகத்தில் அவர்களின் அனைத்து விதமான குறிக்கோள்களையும் தன் சுய சிந்தனையினால் வெளிப்படுத்த முன்வந்திருக்கின்றனர். ஒவ்வொரு எழுத்தாளர்களும் தன் சுய சிந்தனையின் மூலம் அவர்களது குறிக்கோள்களை கொழுந்து விட்டு எரியும் தீயைப்போல் பரவச் செய்யவே இப்புத்தகத்தின் தலைப்பு "சிந்தனைத் தீ" என துவங்கியுள்ளோம்.இப்புத்தகத்தில் உள்ள அனைத்து கவிஞர்களும் வெற்றி பெற வாழ்த்துகின்றோம்.         எம்.சபீனாபகுருதீன்
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners