படைப்பினை ஆழ்ந்து நோக்கி, சிறந்த கண்ணோட்டத்தோடு படைப்பு உருவானதன் தேவையை அணுகி அதன் இயல்புகளை வெளிப்படுத்த ஆய்வு தேவையாகிறது. ஏன்? எப்படி? எதற்காக? எனும் கேள்விகள் மனித சிந்தனைக்குத் தோற்றுவாயாகிறது. இந்த உந்து சக்தியே, சிறந்த படைப்புகளுக்கு அங்கீகாரத்தை வழங்குகிறது. அவ்வகையில் சங்க காலம் தொடங்கி தற்காலம் வரையிலும் படைப்புகளால் தமிழுலகம் கொண்டாடப்பட்டு வருகிறது. இருப்பினும் படைப்பினைச் சுவைத்து அதன் இனிமையைப் பறைசாற்றுவதற்கான முயற்சியில் எனது ஆய்வுக் கட்டுரைகள் அமைந்துள்ளன.
மனத்தின் அறிதிறன் கொண்டு கட்டுரைகள் ஆய்வுநெறிக்கண் அமைந்துள்ளன. இலக்கியப் பாடுபொருள்கள் ஒவ்வொரு நூற்றாண்டிலும் ஒவ்வொரு வகையாக அமைந்திருக்கின்றது. ஆய்வுக்கான அணுகுமுறைகள் பின்பற்றப்பட்டு இலக்கிய வெளிச்சம் உலகம் முழுவதும் மேலும் பரவ இக்கட்டுரைகள் வழிகாட்டும் என நம்புகிறேன்.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners