 
                        
                        70களில் உடுமலையில் பிறந்து வளர்ந்த என்னைப் போன்றவர்கள் உண்மையிலேயே கொடுத்துவைத்தவர்கள். நண்பர்கள், விளையாட்டு என்பதைத் தவிர வேறு ஒன்றும் பெரிதாக அறிந்துகொள்ளாமல், அலட்டிக்கொள்ளாமல் வாழ்க்கை இன்பமயமானதாக இருந்தது. அப்போதைய நிலவியலும், உளவியலும் கலந்த எங்கள் அனுபவங்களையும், பார்த்த-கேட்ட-நுகர்ந்தவைகளையும் உண்மையும் புனைவும் பிணைந்த கதைகளாக எழுதி அவற்றை தலைமுறைகள் தாண்டிக் கடத்தவேண்டும் என்ற ஆர்வத்தில் விளைந்தது இந்த சிறுகதைத் தொகுப்பு.
“ஒவ்வொரு நொடியிலும் இறந்த காலம் நம்மிடம் இருந்து உதிர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால் காலத்தின் ஆணி வேர் நம் நினைவுகளில் பத்திரமாகத் தேங்கி விடுகிறது. அதிலும் சொந்த ஊராகக் கருதும் ஊரும் இளமைக் காலமும் சற்றே அதிக வண்ணங்களுடன் நினைவுகளில் பளீரென மின்னுகின்றன. அதில் நம் எல்லோருக்கும் ஒரு அதீதமான கிளர்ச்சி மன நிலை உருவாகி விடுகிறது. அவ்வாறான மன நிலையில் உருவான கதைகளின் தொகுப்பே இந்த நூல்.”
தனபால் பத்மநாபன், திரைப்பட இயக்குனர், iGene DI & VFX Studio, Chennai
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners