ஐந்தாம் பிறை
பொதுவாய் அமாவாசை கழிந்த மூன்றாம் நாள் நிலா தன்னுடைய முகத்தை ஒரு மெல்லிய வளைந்த கோடாய் மேற்குத் திசையில் காட்டும் . அதற்கு மூன்றாம் பிறை என்று பெயரிட்டு அதைப் பார்ப்பதையே அதிர்ஷ்ட நாளாய்க் கருதுகிறோம் . இந்து மதம் மட்டுமல்ல , மற்ற மதங்களும் மூன்றாம் பிறையைக் கொண்டாடுகின்றன . ஆனால் இந்த நாவலில் நிலவின் ஐந்தாம் பிறைக்கு ஒரு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு , விபரீதமான நிகழ்வுகள் நடக்கின்றன . கதையில் எத்தனையோ கதாபாத் திரங்கள் உலா வந்தாலும் முக்கியமான கதாபாத்திரம் இந்த ஐந்தாம் பிறைதான் . எப்படி என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டுமா .. ? நாவலைப் படியுங்கள் ! ஆச்சர்யப்படுங்கள் !!
அடுத்த இலக்கு
இந்த உலகில் நடைபெறும் குற்றச் சம்பவங்கள் அது எப்படிப்பட்ட சம்பவமாக இருந்தாலும் சரி ... பணம் , பெண் , பகை - இந்த மூன்றில் ஏதாவது ஒன்றில் அடங்கிவிடும் . ஆனால் இந்த ‘ அடுத்த இலக்கு ’ நாவலில் நடைபெறும் குற்றச் சம்பவங்களுக்கு அடிப்படைக் காரணம் மேற்சொன்ன மூன்றும் அல்லாமல் வேறு ஒரு காரணம் . அதுவும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய காரணமாக இருப்பதுதான் வியப்பான ஒரு விஷயம் . கதையின் முடிவு உங்களுக்கு அதிர்ச்சி யைக் கொடுத்தாலும் , அது இன்ப அதிர்ச்சியாகவே இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners