ஆட்டிஸ நிலையாளரான அரவிந்த் குமாரால் பேச முடியாது. ஆனாலும் பலதரப்பட்ட பார்வையாளர்களின் கேள்வி பதிலுக்கு கம்ப்யூட்டரில் டைப் செய்து பதில் அளிப்பதன் மூலம் அனைவரிடமும் தொடர்பு கொள்ள விரும்பினார்.
பலதரப்பட்ட கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டன. ஆழ்ந்த தத்துவம், நகைச்சுவை, ’எனக்குத் தெரியாது” என்று பதிலளிக்கும் குழந்தைத்தனமான பதில்கள் என பல வகையான பதில்கள் அவை.
இப்புத்தக வெளியீட்டில் பேசிய அனைத்து முக்கிய பேச்சாளர்களும் ஒட்டு மொத்தமாக சொன்னது “அரவிந்தின் புத்தகம் ஒரு மேதையின் புத்தகம்!” என்று.
ஒரு ஆட்டிஸ நிலையாளரின் மன நிலை எப்படி இருக்கும் என்பது குறித்து இப்புத்தகம் என்னும் ஜன்னல் வழியே சமுதாயம் எட்டிப் பார்த்து அறிந்து கொள்ளலாம். சமுதாயம் இவர்களைப் புரிந்து கொள்வதற்கும் சமுதாயத்தில் இவர்களை இணைத்துக் கொள்வதற்குமான சிந்தனையைப் புகுத்தவும் இப்புத்தகம் வழிவகுக்கும் என்று நம்பிக்கை பிறக்கிறது.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners