“என் இனியவனே, இது உன்னுடைய கதை; என்னுடையதும் கூட. நான் இதை எழுதுவதற்குப் பல சமயங்களில் முயன்றிருக்கிறேன். வேண்டாம் என்று நினைக்கவும் செய்தேன். போதிய துணிவு என்னிடம் இருந்திருக்கவில்லை. இதன் ஒவ்வொரு சொல்லும் என் உணர்வுகளில் வேதனையையும், பாரத்தையும் சுமந்து கொண்டு கூலிகளைப் போலத்தான் உதயமாகின்றன. என் கண்கள் நனையும் பொழுது நான் வியந்து போகிறேன். எத்தனை வருடங்களுக்குப் பிறகு இன்றும் நான் உன் நினைவுகளிலிருந்து விடுதலை பெற முடியவில்லை அல்லவா!”
“என் இனியவனே! இனி ஒரு போதும் நான் உன்னைக் காண மாட்டேன். அதனால் மட்டுமே நான் இந்தக் கதையை எழுதுகிறேன். இந்தக்கதைக்கு உயிருள்ள காலம் வரை நீ எனக்குப் பூரணமாக நஷ்டப்படமாட்டாய் என்று எனக்குத் தெரியும். ஆனால் எதிர்காலத்தில் என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்று யாருக்குத் தெரியும்?”
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners