திரவியா நாம் கதையின் நாயகி, தன் மூன்று வயதில் இந்தியாவை விட்டு தன் பெற்றோருடன் கனடா சென்ற
திரவியா, பல வருடங்களுக்கு பிறகு, தன் தந்தையின் காதல் திருமணத்தால் பிரிந்த தன் குடும்ப உறவுகளை
தேடி தன் தாய்நாட்டில் அடியெடுத்து வைக்கிறாள். தன் தாய், தந்தை பிறந்த ஊருக்கு செல்லும் தியாவை
அவளின் தந்தையின் குடும்பம் ஏற்றுக் கொண்டார்களா? காதல் திருமணம் செய்த தன் மகன் மீது கோபத்தில்
இருக்கும் தியாவின் தாத்தா, அவளை தன் பேத்தியாக ஏற்பாரா? தியாவை சின்ன வயதில் இருந்து காதலிக்கும்
அவள் மாமன் மகன் அகரனை காதலிக்க தொடங்கும் தியாவின் காதல் கல்யாணத்தில் முடிந்தா? தவறான
புரிதலில் தியாவின் மனதை சுக்குநூறாக உடைத்த அகரனை தியா மன்னித்து மணமுடிப்பாளா? சிறுவயதில்
இருந்து தன் மாமன் மகனை காதலிக்கும் தியாவின் சித்தப்பா மகள் அரும்பு, தியாவின் காதலுக்கு தடையாக
நிற்பாளா? பலவருடங்களுக்கு பிறகு கிடைத்த உறவுகளை கொண்டாடி தீர்க்கும் முன் தன் சின்ன வயது
தோழன் விஷ்வாவின் சதியால் தன் குடும்பத்தை விட்டும், வீட்டை விட்டும் மீண்டும் வெளியேறும் தியா
மீண்டும் தன் சொந்தங்களுடன் இணைந்தாளா? இத்தனை வருடங்களாக தியாவின் தாய், தந்தை ஏன்
சொந்தங்களை சந்திக்காதது ஏன்? தியாவுடன் அவர்கள் ஏன் இந்தியா வரவில்லை. அப்படி என்னதான்
கோவம் அவர்களுக்கு தன் குடும்பத்தின் மீது? இந்த அனைத்து கேள்விகளுக்கும் விடை இந்த கதையில்...
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners