Share this book with your friends

Oru Thuli Kadal / ஒரு துளி கடல்

Author Name: RajeshKumar | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

க்ரைம் கதை மன்னர் என்று நான்கு தலைமுறை வாசகர்களால் அழைக்கப்பட்டவர் அன்புக்குரிய எழுத்தாளர் ராஜேஷ்குமார், இப்பொழுது ஐந்தாவது தலைமுறை வாசகர்களையும் தன்னுடைய எழுத்துக்கள் மூலம் ஈர்த்து, அவர்களையும் வாசிக்க வைத்துக் கொண்டு இருக்கிறார். 

அச்சிதழ்கள் வாயிலாக இவருடைய படைப்புகள் வெளியாகி உலகில் வாழும் தமிழர்கள் அனைவரும் விரும்பிப் படிக்க காரணம் இவருடைய நாவல்களில் அறிவியலும், குற்றவியலும் ஒன்றாக சங்கமித்து சம்பவங்கள் மின்னல் வேகத்தில் நகர்வதுதான். இப்போதும் இவரது படைப்புகள் அனைத்தும் காலத்தை வென்று மின்புத்தகங்களாகவும்,ஒலிப்புத்தகங்களாகவும்,திரைப்படங்களாகவும் வாசகர்களுக்கு விருந்து படைத்து கொண்டிருக்கின்றன. 

கடந்த 50 ஆண்டுகளாக இவர் 1500 மேற்பட்ட  நாவல்கள் 2000 மேற்பட்ட சிறுகதைகள் எழுதி சாதனை படைத்துள்ளார். இவரது  சாதனையை இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் 2022ல் அங்கீகரித்துள்ளது அதுதவிர, அறிவியல் கட்டுரைகள், வாழ்வியல் கட்டுரைகள், சமூக மற்றும் ஆன்மிக புதினங்களையும் எழுதியுள்ளார்.

மிக முக்கியமாக 'என்னை நான் சந்தித்தேன்' என்கிற பெயரில் தன் வாழ்வில் நடந்த முக்கியமான நிகழ்வுகளை சுயசரிதமாகவும் படைத்துள்ளார். இது ஒரு மிகச்சிறந்த சுயமுன்னேற்ற நூலாக இன்றைய இளைஞர்களுக்கு விளங்குகிறது.

இவருக்கு தமிழ்நாட்டின் கலைக்கான உயரிய விருதான கலைமாமணி விருது  2010ம் ஆண்டு  வழங்கப்பட்டிருக்கிறது. நேற்றல்ல, இன்றல்ல... என்றுமே தமிழ் குற்றப் புதினங்களின் மன்னர் இவர்தான் என்றால் அது மிகையல்ல.

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

ராஜேஷ்குமார்

ராஜேஷ்குமார், 1947-ம் ஆண்டு மார்ச் 20ம் தேதி கோவை மாநகரில் பிறந்தவர். இவரின் இயற்பெயர் ராஜகோபால். பின்னர் எழுத்துக்காக ராஜேஷ்குமார் எனும் புனைப்பெயர் கொண்டார். இதுவரை 1500 நாவல்கள் 2000 சிறுகதைகள் எழுதியுள்ளார். இவற்றைத்தவிர நூற்றுக்கணக்காண அறிவியல்,ஆன்மிக மற்றும் வாழ்வியல்  கட்டுரைகள் படைத்துள்ளார். அவற்றில் “ஸார் ஒரு சந்தேகம்!” , “வாவ் ! ஐந்தறிவு”, “சித்தர்களா! பித்தர்களா!!”  முக்கியமானவை.

பி.எஸ்ஸியில் தாவரவியலையும் பி.எட்டில் நேச்சுரல் சயின்ஸையும் முடித்து ஐந்தாண்டு காலம் ஆசிரியராய் பணி புரிந்த பிறகு அந்தப் பணியை ராஜினாமா செய்துவிட்டு தன் தந்தை செய்த கைத்தறிச்சேலை வியாபாரத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர்,  அதை கவனித்தபடியே கதைகள் எழுதினார்.இவரின்  முதல் சிறுகதை 1969ம் வருடம் மாலை முரசு கோவை பதிப்பில் வெளிவந்தது. 1980வது வருடம் இவருடைய முதல் நாவல் மாலைமதி மாத இதழில் வெளிவந்தது. நாவலின் தலைப்பு வாடகைக்கு ஓர் உயிர். அதே 1980வது வருடம் கல்கண்டு வார இதழில் ஏழாவது டெஸ்ட் ட்யூப் என்ற  முதல் தொடர்கதை வெளியானது.

1980லிருந்து 1995 வரை தமிழ்நாட்டில்  41 மாத நாவல்கள் வெளிவந்தன. அனைத்திலும் ராஜேஷ்குமார் தொடர்ந்து எழுதியதின் விளைவு 1998ம் ஆண்டே 1000மாவது நாவலைத் தொட்டுவிட்டார்.

 இவரது  எழுத்து படிக்க எளிமையாகவும், படித்தவுடனேயே புரிந்து கொள்ளும்படியாக இருப்பதால் பாமர வாசகர்களும் படிக்கிறார்கள். அதேபோல் பல்துறை வல்லுனர்களும் படிக்கிறார்கள் வாசிக்கிறார்கள்.

சில தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளும், நாவல்களும் பிராந்திய மொழிகளிலும், ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இவருடைய நாவல்களை  பல பல்கலைக்கழக மாணவர்கள் பி.எச்டி. படிப்பில் ஆய்வுக்காக எடுத்துக் கொண்டு டாக்டர் பட்டம் பெற்று இருப்பது சிறப்பு.

இவருடைய  நாவல்கள் பல திரைப்படங்களாகவும்  தொலைக்காட்சித்   தொடர்களாகவும்  தயாரிக்கப்பட்டுள்ளன. இவரது படைப்புக்கள் அச்சுப்புத்தகங்களாக மட்டுமின்றி  மின்புத்தகங்களாகவும் ஒலிப்புத்தகங்களாகவும் அடுத்த தலைமுறைக்கு கிடைக்கின்றன. எழுத்துலகில் இவர் ஆற்றிய  சாதனையை இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் 2022ல் அங்கீகரித்துள்ளது. இவர்க்கு தமிழக அரசு, 2010ல் கலைமாமணி விருது வழங்கி சிறப்பு செய்துள்ளது.

 

Read More...

Achievements

+8 more
View All