Share this book with your friends

RAJESHKUMAR KEVLI BATHILGAL / ராஜேஷ்குமார் கேள்வி - பதில்கள்

Author Name: RajeshKumar | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

க்ரைம் நாவலாசிரியர் ராஜேஷ்குமாரின் இன்னொரு பரிணாமம் தான் இந்த புத்தகம். 

க்ரைம் மட்டுமல்ல, சமூகம் மற்றும் குடும்பம் சம்பந்தப்பட்ட நாவல்களையும் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வரும் ராஜேஷ்குமார், பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டபோது வாசகர் கேட்ட கேள்விக்கு சுவைபட பதில்களை அளித்துள்ளார். 

ஒவ்வொரு கேள்விக்கான பதிலையும் நீங்கள் படித்து முடிக்கும் போது உங்களுடைய உதடுகளில் புன்னகை ஒன்று உதிப்பது உறுதி. பெரும்பாலான கேள்வி பதில்கள்,நம்முடைய வாழ்க்கையோடு சம்பந்தப்பட்டவை என்பதால் அவை பயனுள்ளதாக இருப்பது இந்தப் புத்தகத்தின் இன்னொரு ப்ளஸ் பாயிண்ட்.

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

ராஜேஷ்குமார்

ஆர்.கே. என்னும் இந்த இரண்டு எழுத்துக்களுக்குள் அடங்கியிருக்கும் ராஜேஷ்குமார் என்னும் எழுத்தாளர் 1969ம் ஆண்டு தன்னுடைய 21 வயதில் எழுத ஆரம்பித்து 2019ல் தன்னுடைய எழுத்துலக வாசத்தின் 50வது ஆண்டாய் முடித்துக் கொண்டு இன்னமும் எழுதிக்கொண்டு இருப்பவர்.

1947-ம் ஆண்டு மார்ச் 20ம் தேதி பிறந்த இவர்க்கு பெற்றோர் இட்ட பெயர் ராஜகோபால். தாத்தாவின் பெயரான குப்புசாமியையும், அப்பாவின் பெயரான ரங்கசாமியையும் தன்னுடைய பெயரோடு இணைத்துக்கொண்டதின் காரணமாய் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சக மாணவர்களால் கே.ஆர்  என்று அழைக்கப்பட்டவர்.

பி.எஸ்ஸியில் தாவரவியலையும் பி.எட்டில் நேச்சுரல் சயின்ஸையும் முடித்து ஐந்தாண்டு காலம் ஆசிரியராய் பணி புரிந்த பிறகு அந்தப் பணியை ராஜினாமா செய்துவிட்டு அப்பாவுடன் இணைந்து கைத்தறிச்சேலை வியாபாரத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர்.  அதை கவனித்தபடியே கதைகள் எழுதியவர். 1973 முதல் 1980 வரை தன்னுடைய வியாபார விஷயமாக மாதம் ஒரு முறை இந்தியாவின் வடமாநில நகர்களுக்கு சென்று வந்ததின் விளைவாகவும் பலதரப்பட்ட மக்களையும், நிகழ்வுகளையும் சந்தித்ததின் பயனாகவும் பல கதைகள் அவர் மனதிலே உருவாகி சிறுகதைகளாகவும், நாவல்களாகவும் பல்வேறு நாளிதழ்களிலும் வார இதழ்களிலும் வெளிவந்தது.

Read More...

Achievements

+8 more
View All