1500க்கும் மேற்பட்ட நாவல்கள் 2000க்கும் அதிகமான சிறுகதைகள் எழுதிய எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் அசாத்திய உழைப்பால் உருவான அறிவியல் கேள்விகளும்- பதில்களும் அடங்கிய தொகுப்பு. இந்த புத்தகத்தை படித்தவர்கள், எதையும் கேள்வி கேட்டு கற்பதில் விற்பன்னர் ஆகி விடுவார்கள்.
இதோ அவரின் வார்த்தைகளில், இந்த புத்தகத்தைப் பற்றி...
அன்புக்குரிய வாசக நெஞ்சங்களே...! உங்கள் கைகளில் இப்போது இடம் பிடித்துள்ள "ஸார்..! ஒரு சந்தேகம்" வாசகர்கள், முகநூல் நண்பர்கள் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பல பள்ளிகளைச் சார்ந்த ஆசிரியர்களும் மாணவ மாணவிகளும்,கேட்ட பல அரிய அறிவியல் கேள்விகளுக்கு அதற்கு எளிய முறையில் புரியும் வகையில் பதில்களை சிறப்பாக கொடுக்க முடிந்ததில் மிகுந்த மனநிறைவு கொள்கிறேன். இந்த அறிவியல் புத்தகம், தினமும் நாம் எதிர்கொள்ளும் பல விஷயங்களின் அடிப்படை உண்மைகளை விளக்குகிறது.இறகு எடை காகிதத்தில் உருவான இந்த புத்தகம்..... கண்ணுக்கும் கைக்கும் தொடர்பை ஏற்படுத்தும் அறிவுப் பாலம்.
ஒரு விஷயத்தை கஷ்டப்பட்டும் கற்கலாம்... மகிழ்ச்சியாகவும் கற்கலாம்... அது அமையும் ஆசானைப் பொறுத்தது. அறுதியிட்டு சொல்வேன்.. இந்த புத்தகம் பின்னே சொன்ன வகையைச் சார்ந்தது.
கற்றலின் தொடக்கப் புள்ளி.. இதோ உங்கள் கைகளில்!
என்றும் அன்புடன்
ராஜேஷ்குமார்
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners