Share this book with your friends

The First Twenty Verses of Thiruvaaymozhi / திருவாய்மொழி முதலிருபது ஒரு எளிய தமிழ் விளக்கவுரை/A simple Tamil explanation

Author Name: Rajagopalan.S | Format: Paperback | Genre : Philosophy | Other Details

"அன்பின் வழியது உயிர் நிலை" என்பார் வள்ளுவர். அன்புடையோரே உயிருடையார் என்பது அவர் கருத்து. நம் குறிக்கோள்கள் நம் வாழ்க்கையை அழகுபடுத்தி, நெறிப்படுத்தி, மற்றும் நம் செயல்களை ஒருமுனைப்படுத்தி, அதற்கொரு மதிப்பை அளித்துவிடுகின்றன . குறிக்கோள்கள் பலவாக இருக்கலாம். அவற்றுள் தலையாயது அன்பு செய்தலே. அன்பின் வகைகள் பலவுண்டு . அவற்றினுள், மிகத்தூயதும், மிக்க இனியதுமான ஒன்று, இறைவனிடம் பேரன்பு பூண்டிருத்தலே. இவ்வுலகம் இறைவனின் பேரன்பு ஒழுகியோடும் ஒரு பெருநதி என்பதில் ஐயமேதுமில்லை. இவ்வன்புநதியில் மூழ்கியெழுந்து ஒரு பெருவாழ்வு வாழ்ந்தவர் நம் நம்மாழ்வார்.  இப்பேரன்பின் பெருமையை தமக்கு உணர்த்தி அதன் வழியே இவ்வுலகினோர் அனைவர்க்கும் உணர்த்தவே இறைவன் தமக்கு அன்பு கலந்த நெஞ்சத்தையும் அறிவுசெறிந்த உணர்வையும் தந்தருளினார் என்கிறார் தம் "திருவாய்மொழியில்". இத்தகைய பெரியோரே, உலகம்  முழுவதும் பரவும்படி, தமிழ்நாட்டுக்கு “இது  ஒரு ஆன்மீக பூமி”  என்ற அடையாளத்தை அளித்தவராவர் . இவரின் பெருமையை உலகினுக்குணர்த்தவே, நம் ராமானுஜர் போன்றோரும் நம்மாழ்வாரைத்தம் ‘தலையாய ஆசிரியர்’ என்று அறிவித்தனர். தம் கோட்பாடுகளை, இவடைய உபதேசமொழிகளை உள்வாங்கி விவரித்தனர். இவ்வமுதமொழிகளின் ஆயிரத்திற்கும் , நம்முன்னோர்கள் எழுதிய விரிவுரை களிலிருந்து,  ஒரு இருபதுக்கு மட்டுமே, அவ்வுரைகளின் அடிப்படையில், எளிய தமிழில் எழுதப்பட்ட விளக்கவுரைகளின் தொகுப்பிது. அன்பு வெள்ளம் பெருகட்டும்.

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

Also Available On

சே.ராஜகோபாலன்

ராஜகோபாலன், நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு ஆசிரியராக  சேவை செய்துகொண்டிருக்கிறார் என்பதன் வழியே மிக்க பெருமிதமும் மகிழ்ச்சியையும் அடைகிறார் . இப்பாரதநாட்டின் எல்லா மொழிகளையும், குறிப்பாக தமிழையும் ஸம்ஸ்க்ருதத்தையும் அவர் மிகவும் நேசிக்கிறார் ஐந்து வேறு வேறு பிரிவுகளில் எம் ஏ பட்டம் பெற்ற இவர், ஒருவன், தான் பெற்ற அறிவின் மூலமாக மட்டுமே ஒரு உயர்ந்த மனிதனாக வளர்ச்சியை அடைய முடியும் என்று நம்புகிறார். பாரத நாட்டின் பாரம்பரியத்தின் மேலும் மற்றும் அதன் பண்பாட்டின் மேலும் மிக ஆழமான அன்பு வைத்திருக்கிறார். பாரதியார் மற்றும் ரபீந்திரநாத்  டாகுர் என்ற இவ்விருவர்களின் கவிதைகளை மிகவும் விரும்புகிறவர் இவர். திருக்குறளுக்கு, இவர் சம்ஸ்க்ருதத்தில் செய்த மொழிபெயர்ப்பு, சென்னையிலுள்ள செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது. பத்துப்பாட்டில் உள்ள பத்து நூல்களையும், மற்றும் கம்பராமாயணத்தையும்(பால காண்டம்) இவர் அதே மொழியில் மொழிபெயர்த்துள்ளார். இவையிரண்டும் விரை விலேயே வெளியிடப்படும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார் வைணவம் உலகிலுள்ள எல்லா மதங்களுள்ளும் மிகச்சிறந்தது, ஏனெனில், அது வாழ்க்கையின் மிக அழகான கோணங்களை நமக்கு எடுத்துக்காட்டுகிறது என்று உறுதியாக நம்புகிறார். இவர், தன்னை ராமானுஜரின் கருத்துக்களைப்பின்பற்றுபவர் என்றும், மற்றும், வேதங்களை விரும்பிப்படிக்கும் ஒரு மாணாக்கராவார் என்றும் அடையாளப்படுத்திக்கொள்ள விரும்புகிறார்

Read More...

Achievements