பெண் எழுத்தாளர் தீர்க்காவும் , அவள் தோழி மதுவிகாவின் அண்ணனும் போலீஸ் அதிகாரியுமான வசந்த்தும் இணைந்து ஒரு கொலை சம்பந்தமாய் புலனாய்வு ஒன்றை மேற்கொள்கிறார்கள். முதல் கட்ட விசாரணையில் சாதாரணமாக இருப்பது போல் தெரியும் விஷயங்கள், விசாரணையில் அடுக்கடுக்காய் திடுக்கிடும் சம்பவங்களாக மாறிவரவும் இருவரும் அதிர்கிறார்கள்.
ஒரு கட்டத்தில், இதுவரைக்கும் அறியப்படாத மர்மங்கள் நிறைந்த கிராமம் ஒன்று தமிழ்நாட்டில் இருப்பது தெரிய வருகிறது. அது ஒரு ஆன்மீகம் சம்பந்தப்பட்ட கிராமம் போல் தோன்றினாலும் அங்கே அமானுஷ்யமான பல நிகழ்வுகள் நடப்பதை கண்கூடாய் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போகிறார்கள். அந்த கிராமத்தில் மூன்று நாட்களுக்கு மேல் இருந்தால் உயிரோடு இருக்க முடியாது என்பதை உணர்ந்தும் புலனாய்வை மேற்கொள்கிறார்கள்.
அந்த கிராமத்தின் பெயர் நற்கோள்புரம்.
பறக்கும் கற்கள்,ஊரையே ஆட்டி படைக்கும் பஞ்ச வர்ண ஸ்வாமிகள், எப்போதுமே ஆயிரத்தை தாண்டாத மக்கள் தொகை,மூன்று நாட்களுக்கு மேல் தங்கிய விருந்தினர்கள் உயிர் இழப்பார்கள் என பயமுறுத்தும் கிராமம், அந்த கிராமம்.
பரபரப்பான நிகழ்வுகள் திடுக்கிடும் சம்பவங்கள் என உங்களை அதிர்ச்சியில் கட்டிப் போடுவாள், இந்த தேவதை.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners