Share this book with your friends

THEVAI ORU DEVATHAI / தேவை ஒரு தேவதை

Author Name: RajeshKumar | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

பெண் எழுத்தாளர் தீர்க்காவும் , அவள் தோழி மதுவிகாவின் அண்ணனும் போலீஸ் அதிகாரியுமான வசந்த்தும் இணைந்து ஒரு கொலை சம்பந்தமாய் புலனாய்வு ஒன்றை மேற்கொள்கிறார்கள். முதல் கட்ட விசாரணையில் சாதாரணமாக இருப்பது போல் தெரியும் விஷயங்கள், விசாரணையில் அடுக்கடுக்காய் திடுக்கிடும் சம்பவங்களாக மாறிவரவும் இருவரும் அதிர்கிறார்கள். 

ஒரு கட்டத்தில், இதுவரைக்கும் அறியப்படாத மர்மங்கள் நிறைந்த கிராமம் ஒன்று தமிழ்நாட்டில் இருப்பது தெரிய வருகிறது. அது ஒரு ஆன்மீகம் சம்பந்தப்பட்ட கிராமம் போல் தோன்றினாலும் அங்கே அமானுஷ்யமான பல நிகழ்வுகள் நடப்பதை கண்கூடாய் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போகிறார்கள். அந்த கிராமத்தில் மூன்று நாட்களுக்கு மேல் இருந்தால் உயிரோடு இருக்க முடியாது என்பதை உணர்ந்தும் புலனாய்வை மேற்கொள்கிறார்கள். 

அந்த கிராமத்தின் பெயர் நற்கோள்புரம்.

பறக்கும் கற்கள்,ஊரையே ஆட்டி படைக்கும் பஞ்ச வர்ண ஸ்வாமிகள், எப்போதுமே ஆயிரத்தை தாண்டாத மக்கள் தொகை,மூன்று நாட்களுக்கு மேல் தங்கிய விருந்தினர்கள் உயிர் இழப்பார்கள் என பயமுறுத்தும் கிராமம், அந்த கிராமம்.

பரபரப்பான நிகழ்வுகள் திடுக்கிடும் சம்பவங்கள் என உங்களை அதிர்ச்சியில் கட்டிப் போடுவாள், இந்த தேவதை. 

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

ராஜேஷ்குமார்

ஆர்.கே. என்னும் இந்த இரண்டு எழுத்துக்களுக்குள் அடங்கியிருக்கும் ராஜேஷ்குமார் என்னும் எழுத்தாளர் 1969ம் ஆண்டு தன்னுடைய 21 வயதில் எழுத ஆரம்பித்து 2019ல் தன்னுடைய எழுத்துலக வாசத்தின் 50வது ஆண்டாய் முடித்துக் கொண்டு இன்னமும் எழுதிக்கொண்டு இருப்பவர்.

1947-ம் ஆண்டு மார்ச் 20ம் தேதி பிறந்த இவர்க்கு பெற்றோர் இட்ட பெயர் ராஜகோபால். தாத்தாவின் பெயரான குப்புசாமியையும், அப்பாவின் பெயரான ரங்கசாமியையும் தன்னுடைய பெயரோடு இணைத்துக்கொண்டதின் காரணமாய் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சக மாணவர்களால் கே.ஆர்  என்று அழைக்கப்பட்டவர்.

பி.எஸ்ஸியில் தாவரவியலையும் பி.எட்டில் நேச்சுரல் சயின்ஸையும் முடித்து ஐந்தாண்டு காலம் ஆசிரியராய் பணி புரிந்த பிறகு அந்தப் பணியை ராஜினாமா செய்துவிட்டு அப்பாவுடன் இணைந்து கைத்தறிச்சேலை வியாபாரத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர்.  அதை கவனித்தபடியே கதைகள் எழுதியவர். 1973 முதல் 1980 வரை தன்னுடைய வியாபார விஷயமாக மாதம் ஒரு முறை இந்தியாவின் வடமாநில நகர்களுக்கு சென்று வந்ததின் விளைவாகவும் பலதரப்பட்ட மக்களையும், நிகழ்வுகளையும் சந்தித்ததின் பயனாகவும் பல கதைகள் அவர் மனதிலே உருவாகி சிறுகதைகளாகவும், நாவல்களாகவும் பல்வேறு நாளிதழ்களிலும் வார இதழ்களிலும் வெளிவந்தது.

Read More...

Achievements

+8 more
View All