Share this book with your friends

Thirukkural: Meypporuludan - Thoguthi 3 / திருக்குறள்: மெய்ப்பொருளுடன் - தொகுதி 3 Porutpaal - Paguthi 2

Author Name: Krishna Prasad | Format: Hardcover | Genre : Poetry | Other Details

திருக்குறள்: மெய்ப்பொருளுடன் - தொகுதி 3: பொருட்பால், பகுதி 2 என்பது பொருட்பாலின் தொடர்ச்சியை, நுட்பமான சொற்பொருள் ஆதரவோடும் வாசகனுக்குப் புரியும் பொருளுரையோடும் வழங்கும் பதிப்பு. குறள் 731 முதல் 1080 வரை, அதிகாரம் 74 முதல் 108 வரை, நாடு முதல் கயமை வரை இத்தொகுதியில் இடம்பெறுகின்றன. நாடு, அரண், படை, நட்பு, குடிமை, பண்புடைமை, நாணுடைமை, சமூக உறவுகள், மனித தன்மைகள் ஆகியவை இந்தப் பகுதியில் விரிகின்றன. ஒவ்வொரு குறளுக்கும் மூலம், சொற்பொருள், நேர்பொருள், பொருளுரை என்ற நான்கு அடுக்குகள் தரப்படுவதால், குறளின் சொல் மற்றும் கருத்து இரண்டும் ஒருங்கே அணுகக்கூடியதாகின்றன. தமிழைச் சுவைத்துப் படிக்க விரும்புவோருக்கும், வள்ளுவரின் சமூகப் பார்வையை நேரடியாகப் புரிந்துகொள்ள விரும்புவோருக்கும் இத்தொகுதி நம்பத்தகுந்த துணை.

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

Also Available On

கிருஷ்ண பிரசாத்

கோவையை தன் தாயகமாகக் கொண்ட கிருஷ்ண பிரசாத், தந்தையின் பணி நிமித்தம் சென்னையில் பிறந்து, கோவையில் வளர்ந்தவர். கணினி பயன்பாட்டியலில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர், கணினி அறிவியல் மற்றும் பயன்பாட்டியல் துறையில் பேராசிரியராகத் தன் பணி வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் தகவல் தொழில்நுட்பத் துறையில் அடியெடுத்து வைத்த இவர், இன்று இருபத்தி நான்கு ஆண்டுகளுக்கும் மேலான தொழில் அனுபவத்தைக் கொண்டிருக்கிறார்.தமிழ் இலக்கியத்தின் மீதும் திருக்குறளின் மீதும் இவருக்கு ஆழமான பற்றை விதைத்தவர், இவரது மறைந்த தந்தை சுந்தரம் ஆவார். தமிழ் அறிஞரும் கட்டுமானப் பொறியாளருமான சுந்தரம் தன் மகனுக்குத் தமிழின் செழுமையையும் வள்ளுவத்தின் ஆழத்தையும் சிறுவயதிலேயே அறிமுகப்படுத்தினார். அந்த விதை இன்று இப்பதிப்பாகக் கனிந்திருக்கிறது.மூல ஆசிரியர் திருவள்ளுவர் அருளிய திருக்குறளை இன்றைய தலைமுறையினருக்கு எளிமையாகவும் அர்த்தமுள்ள வகையிலும் கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன், கிருஷ்ண பிரசாத் இந்நூலைத் தொகுத்துப் பதிப்பித்துள்ளார். இது அவரது சொந்த படைப்பு அல்ல; மாறாக, வள்ளுவரின் அழியாப் பெருங்கருத்துக்களை நவீன வாசகர்களுக்கு அழகுறவும் தெளிவுறவும் வழங்கும் ஒரு பதிப்புப் பணியாகும்.இவர் தன் துணைவியார் திவ்யஸ்ரீ மற்றும் மகன்கள் கணவ் சிம்ஹா, கௌஸ்தவ் சிம்ஹா ஆகியோருடன் அன்பான குடும்ப வாழ்க்கை நடத்தி வருகிறார். தந்தையின் கனவை நிறைவேற்றும் முகமாகவும், தமிழ் மொழிப் பணியின் ஒரு அங்கமாகவும் இந்நூல் வெளிவருகிறது.

Read More...

Achievements