Share this book with your friends

vannathupoochigal / வண்ணத்துப்பூச்சிகள்

Author Name: Arunachalam | Format: Paperback | Genre : Poetry | Other Details

வண்ணத்துப்பூச்சிகள், இது என்னை எழுத்துலகில் அறிமுகம் செய்யும் முதல் நூலாகும்.மனித வாழ்க்கையை எவனொருவனாலும் நிர்ணயித்து கூறமுடியாது. ஆனால்
நான் இந்த நூலின் மூலம் மனிதனின் வாழ்க்கையை பற்றி கூற முயன்றுள்ளேன். காதல் என்ற வார்த்தை பல யுகங்கள்  கடந்தும் காற்றை போல் மனிதன் உடலினுள் கலந்து பயணிக்கிறது. காதல், புரட்சி,இயற்கை,தாய்மை,பெண்மை, தனிமை,உழைப்பு, என்று பல வடிவங்களில் பொன்மொழிகளை
படைத்துள்ளேன்.இந்த நூலின் தாக்கம் மக்களிடையே எப்படி    இருக்குமென்று தெரியவில்லை.இருத்தாலும் என் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் என நம்புகிறேன். வாழ்க்கையில் நாம் தேடினால் கிடைக்காமல் போவதும் உண்டு.தேடாமலேயே கிடைப்பதும் உண்டு..எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி
தன் அன்பை பகிரும் தாய் தான் அனுபவிக்கும் துயரங்களும் ,   இயற்கை அன்னை 
பற்றியும் தந்தை அன்பு பற்றியும் என பல விதமான கருத்துக்கள்... இந்நூலில் அடங்கியுள்ளது....
நெஞ்சை உருக்கும் புரட்சி வரிகள் ,மனம் காயப்படும் போது ஏற்படும் தனிமை இதைபற்றியும் விளக்கியுள்ளேன்..
இதை படித்த பின் இதன்படியே பின்பற்றுங்கள் என்று கூற மாட்டேன்.இதன்படி நடக்க முயற்சியாவது செய்யுங்கள்..
ஏனென்றால் நம்மில் சிலபேர் வாழ்க்கையை முழுமையாக வாழ்வதில்லை....சில பேர் சூழ்நிலையின் காரணமாக கூட இந்த 
நிலைக்கு தல்லப்படுகின்றனர்....... இப்படிப்பட்ட தருணத்தில் என் புத்தகத்தை தேர்வு செய்து படித்துகொண்டிருக்கும் , படிக்கபோகும் நல்ல உள்ளங்களுக்கு என் பணிவான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.....மேலும் இந்நூலிற்கு
பேராதரவு அளித்து மேலும் மேலும் புத்தகங்கள் படைக்க 
உறுதுணையாக இருப்பவர்களுக்கும் எனது நன்றிகளை 
கூறிக்கொள்கிறேன்........

Read More...

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book

Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners

Also Available On

அருணாச்சலம் மா

வணக்கம்.....
வண்ணத்துப்பூச்சிகள் என்ற நூலின் மூலம் எழுத்துலகில்
அறிமுகம் ஆகின்றேன்...என் பெயர் மா.அருணாச்சலம்....
எனது ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் டவுண் பகுதியில்
அமைந்துள்ளது.......நான் பொறியியலில் இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்துள்ளேன்....எனது தந்தை எனக்கு சிறுவயதாக இருக்கும் போதே இவ்வுலகை விட்டு மறைந்துவிட்டார்.....நான் நேரம் கிடைக்கும் போதெல்லாம் 
வேலை செய்துகொண்டே என் படிப்பையும் தொடர்ந்தேன்.......
எனக்கு கல்லாரியில் படிக்கும் போதே செய்முறை தேர்விற்கான நோட்டுகளில் எழுதிக்கொள்வதில் அதிக ஆர்வமுண்டு...எனக்கு எழுதும் வழக்கத்தை அதிகரித்ததில் என் கல்லூரிக்கு மிகுந்த பங்குண்டு..... அவர்கள் கொடுக்கும் எழுத்து வேலைகளை செய்வதில்  நான் ஒருபோதும் தாமதம் செய்ததில்லை ...... இத்தருணத்தில் இன்னொரு உண்மையை சொல்லியாக வேண்டும்.......  நான் வளர்ந்த இந்த சமூக அமைப்பைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும்..
கிராமப்புறமும் இல்லாமல் நகர்ப்புறமும்  இல்லாமல் இரண்டும் 
கலந்த ஒரு சமூக அமைப்பாக இருந்தது........ அங்குள்ள மக்கள்
பின் அவர்களின் வாழ்க்கைச் சூழல் என ஒவ்வொன்றும் என்னை மாற்றிக்கொள்ள ஒரு கருவியாக இருந்தது......
பின் நான் சந்தித்த வெவ்வேறு மனிதர்கள் என் பயணத்தில்
நான் கற்றுக்கொண்ட பாடங்கள் என சொல்லிக்கொண்டே போகலாம்...என் வாழ்வில் ஏற்பட்ட முதல் காதல் அதை 
எப்போதும் மறக்க முடியாது... காதல் என்ற ஒரு புனித வார்த்தையை உணராதவர்களும் இல்லை இவ்வுலகில்......
தந்தை இறந்த பின்பும் ஏன் முன்னாலும் கூட நான் ஒரு குழந்தை போன்ற விளையாட்டுதனமாகவே சுற்றித்திரிந்தேன் 
நான் சந்தித்த அந்த ஒரு நபர் என் வாழ்வில் ஒரு திருப்புமுனையாக அமைந்ததுள்ளார்.........ஏனென்றால் அவரே இந்த எழுத்தாளரை முதன்முதலில் வடிவமைத்த சிற்பி........
அவர் இல்லையென்றால் நான் இப்படி மாறியிருக்கமாட்டேன்...
அதன் பின்னர் நான் என் வேறு உலகத்தை அமைத்துக்கொண்டேன்.... அதற்குள் நானே படைப்பாளன் ஆனேன்....பல சமூக பணிகளில் ஈடுபட ஆரம்பித்தேன்...
என்னுடைய அறிவை வளர்த்துக்கொள்ள புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தேன்..ஒரு சில புத்தகங்கள் மட்டுமே படிப்பேன்..
ஆனால் படிப்பதை விட அதனை கதையாக கேட்பதிலே ஆர்வம்அதிகம்........மேலும் கதை எழுதுவதிலும் ஆர்வம் அதிகம்.....என் மனதில் தோன்றுவதை ஒரு காகிதத்திலோ அல்லது கைப்பேசியிலோ எழுதி வைத்துக்கொள்வேன்..... இப்படியே என்னுடைய எழுத்து மீது உள்ள ஆர்வம் மெல்ல மெல்ல அதிகரித்தது.... இப்படியே இந்த புத்தகம் எழுத ஆரம்பித்தேன் ...இப்படி குறிப்பிட்ட காரணத்திற்காக பல உதவிகளை செய்து என் புத்தகத்தை முடிக்க காரணமாக இருந்தனர்.......மேலும் என் நண்பன் போன்ற தம்பியாகிய 
மனோஜ் குமார்க்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்......
                 &nbs

Read More...

Achievements

+2 more
View All