Experience reading like never before
Read in your favourite format - print, digital or both. The choice is yours.
Track the shipping status of your print orders.
Discuss with other readersSign in to continue reading.
அஷ்வத்ஷங்கர் தென் தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடியில் பிறந்தவர். தன் இளமை கால கல்வியை சென்னையில் பயின்றவர். இளமை முதலே ஆன்மீகத்தில் ஈடுபாடுடையவர். தன் வாழ்க்கையில் ஏற்பட்ட சில பிரச்சனை தீர பல ஜோதிடர்களை அணுகியும் பிரச்Read More...
அஷ்வத்ஷங்கர் தென் தமிழ்நாட்டில் உள்ள தூத்துக்குடியில் பிறந்தவர். தன் இளமை கால கல்வியை சென்னையில் பயின்றவர். இளமை முதலே ஆன்மீகத்தில் ஈடுபாடுடையவர். தன் வாழ்க்கையில் ஏற்பட்ட சில பிரச்சனை தீர பல ஜோதிடர்களை அணுகியும் பிரச்சனை தீராததால், தானே ஜோதிடம் கற்று பரிஹார ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.
அஷ்வத்ஷங்கர் தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் என்ற ஊரில் வாழ்ந்த ஜோதிட சக்ரவர்த்தி திரு.எஸ்.ஆர் வெங்கடசுப்ரமணியன் அய்யர் அவர்களிடம் மாணவனாக சேர்ந்தார். அவரிடம் ஜோதிடம் கற்று பரிஹாரங்களையும் அவருடைய வழிகாட்டுதலில் கற்றுணர்ந்தார். தாமிரபரணி ஆற்றங்கரையிலுள்ள (சேரன்மஹாதேவி என்ற ஊரில்) “வ்யாதிபாத யோக” மஹிமையை வெளி உலகத்திற்கு கொண்டு வந்து குருவின் பாராட்டைப் பெற்றார்.
இந்நூலில் திருமணம், இல்வாழ்க்கை, ஆரோக்கியம், செல்வம். கல்வி ஆகியவற்றில் தடை நீங்கி வாழ்வில் வளம் பெற எளிய பரிஹாரங்களை ஜாதக மேற்கோள்களுடன் விளக்கியுள்ளார். தாமிரபரணி ஆற்றின் மஹிமையையும் ஆற்றின் கரையிலுள்ள கோவில்களில் செய்யக் கூடிய பரிஹாரங்களைப் பற்றியும் மற்றும் ஒருவர் பிறந்த திதியை கொண்டு பலன் கூறும் முறையும், ராசிகற்களை ஜாதகப்படி நாமே சரியாக தேர்ந்தெடுக்கும் வழி முறைகளையும் விளக்கியிருப்பது ஜோதிட உலகில் ஒரு புது முயற்சியாகும்.
ஒவ்வொரு மனிதனுக்கும் திருமணம் செய்யக் கூடிய காலங்களைப் பற்றியும், தகாத காலங்களில் திருமணம் செய்வதனால் ஏற்படும் பிரச்சனைகளையும், அவை தீர்வதற்குரிய வழிகளை எளிமையாக கூறியுள்ளார். ராதா நட்சத்திரத்தில் ஒவ்வொருவரும் பூஜை செய்ய தாமிரபரணி சஹஸ்ரநாமாவளி முழுமையாக தரப்பட்டுள்ளது. ஜாதக விளக்கங்கள் சராசரி மக்களும் படித்து பயன்படும் வகையில் விளக்கப்பட்டுள்ளது.
Read Less...
ஜோதிட பெருமக்களுக்கும், ஆன்மீகத்தில் நாட்டம் உள்ளவர்களுக்கும், மிகவும் பயன் தரும் வகை எனது நூல்கள் "நவக்கிரஹங்களும் ஆன்மீக பரிஹாரங்களும் பாகம் 1 மற்றும் 2" இணைத்து "ஆன்மீக
ஜோதிட பெருமக்களுக்கும், ஆன்மீகத்தில் நாட்டம் உள்ளவர்களுக்கும், மிகவும் பயன் தரும் வகை எனது நூல்கள் "நவக்கிரஹங்களும் ஆன்மீக பரிஹாரங்களும் பாகம் 1 மற்றும் 2" இணைத்து "ஆன்மீக பரிகாரம் பாகம் 1 மற்றும் 2" என்ற பெயரில் வெளியிடுகின்றேன். எனக்கு ஜோதிட அரிச்சுவடியை கற்றுக்கொடுத்த ஆசான் மறைந்த திரு எஸ். ஆர் வெங்கட சுப்ரமணியன் (எட்டையபுரம்) அவர்களுக்கு நன்றி கூறி இந்நூலை அவர்களுக்கு சமர்ப்பிக்கின்றேன். திதி, மற்றும் யோகம் பற்றிய விபரங்களை 2004ம் ஆண்டிலேயே எனது இரண்டாம் பாகத்தில் எழுதியிருக்கிறேன்.
பரிகார ஆராய்ச்சியில் என்னை நன்கு ஊக்குவித்து கற்றுத் தந்த மறைந்த ஆன்மீக செம்மல் ஐயா திரு மிஸ்டிக் செல்வம் அவர்களுக்கு நான் என்றும் கடமை பட்டு இருக்கிறேன். "விஜயாபதியில் நவ அபிஷேகம்" என ஜோதிட பூமி இதழில் 1998 ஆம் ஆண்டு நவ அபிஷேகத்தை நான் பரிஹாரமாக செயல் படுத்தியதை பற்றி என்னை பாராட்டி ஐயா அவர்கள் எழுதியுள்ளார்கள்.
மேலும் வ்யாதிபாத நாம யோகத்துக்கு தாமிரபரணி ஆற்றங்கரையில் சேரன்மஹாதேவியை பற்றி ஒரு வருடம் ஆராய்ச்சி செய்து அதை மக்களுக்கு கொண்டு சென்று அவர்கள் வாழ்க்கையை வளம் பெற செய்தது எனக்கு ஓர் மனநிறைவு. இதனால் லட்சக் கணக்கானோர் பயன் பெற்று இருக்கிறார்கள்.
இந்நூலின் ஒவ்வொரு விஷயமும் தங்களை மறுபடி மறுபடி படிக்கத் தோன்றும். படித்து பயன் பெற்று அதனை எனது இமெயில் முகவரியில் பகிர்ந்து கொள்ளுமாறு வேண்டுகிறேன்.
அன்புடன் தங்கள்
அஷ்வத் ஷங்கர்
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
India
Malaysia
Singapore
UAE
The items in your Cart will be deleted, click ok to proceed.