Experience reading like never before
Sign in to continue reading.
"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Palவாசகன் | எழுத்தாளன் - இரணதீரன் பிரசன்னாRead More...
வாசகன் | எழுத்தாளன் - இரணதீரன் பிரசன்னா
Read Less...
அன்பு சூழ் உலகத்தில் நாம் பார்க்கும் அனைத்து மனிதர்களுமே வெள்ளந்தி மனிதர்கள் தான். நம் மனதுக்குள் எத்தனைக் கோபமும் வன்மமும் இருந்தாலும் எங்கோ ஒரு ஓரத்தில் அன்பு என்ற ஒன்
அன்பு சூழ் உலகத்தில் நாம் பார்க்கும் அனைத்து மனிதர்களுமே வெள்ளந்தி மனிதர்கள் தான். நம் மனதுக்குள் எத்தனைக் கோபமும் வன்மமும் இருந்தாலும் எங்கோ ஒரு ஓரத்தில் அன்பு என்ற ஒன்று ஒட்டிக் கொண்டு தான் இருக்கிறது. வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதர்களையும் எவ்வளவு அழகாகப் பார்க்கிறோமோ அதை விட அழகாகவே இந்த உலகம் நமக்குக் காட்டுகிறது. உலகின் எந்த மூலைக்கு நீங்கள் சென்றாலும் உங்களை இருகரம் விரித்து வரவேற்க வெள்ளந்தி மனிதர்கள் காத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். மென்மையான இதயம் கொண்ட இந்த ஆத்மாக்கள் அவர்கள் நேசிக்கும் உறவுகளுக்காக எந்த எல்லைக்கும் செல்லத் துணிந்தவர்கள். தங்களைச் சோகமும் துயரமும் எவ்வளவு ஆட்கொண்டிருந்தாலும் எந்தவித வஞ்சமும் இல்லாமல் சிரிக்கும் வெகுளிதனமான மக்களைப் பார்த்து, கேட்டு, உறவாடிய கதைகள் தான் இந்த வெள்ளந்தி மனிதர்கள் வாசம். இந்தத் தொகுப்பில் இருக்கும் மனிதர்களை நிச்சயமாக உங்கள் வாழ்க்கையில் சந்தித்து இருப்பீர்கள். அப்படி ஒரு பாக்கியம் கிடைக்கவில்லை என்று நீங்கள் சொல்வீர்களானால் என்றேனும் ஒரு நாள் அவர்களை நிச்சயம் சந்திப்பீர்கள்.
பொன்னியின் செல்வன் புதினத்தினை படித்த வாசகர்களுக்கு இன்று வரை பல கேள்விகளுக்கு விடையே இல்லை அதில் நந்தினியின் தந்தை யார்? ஆதித்த கரிகாலனை கொன்றது யார்? போன்ற பல கேள்விக
பொன்னியின் செல்வன் புதினத்தினை படித்த வாசகர்களுக்கு இன்று வரை பல கேள்விகளுக்கு விடையே இல்லை அதில் நந்தினியின் தந்தை யார்? ஆதித்த கரிகாலனை கொன்றது யார்? போன்ற பல கேள்விகள் இதில் அடங்கும், இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் வருங்கால எழுத்தாளர்கள் பதில் சொல்வார்கள் என்று கல்கி அவர்களே கூறினார். அந்த அடிப்படையில் தான் கொற்றவை மகள் புதினத்தில் பதில் சொல்ல முயற்சி செய்திருக்கிறார் இந்த புத்தகத்தின் எழுத்தாளர் இரணதீரன் பிரசன்னா.
பொன்னியின் செல்வன் புதினம் வரலாற்றுப் புனைவாக இருந்தாலும் பிற்கால சோழப் பேரரசில் நிகழும் சில வரலாற்றுச் சம்பவங்களை பல வரலாற்று கதாப்பாத்திரங்களை கொண்டு அமைத்திருந்தார் அமரர் கல்கி. இதில் மதுராந்த சோழர் என்ற உத்தம சோழரைப் பற்றிய வரலாறு மட்டும் தான் செப்பு பட்டயங்கள் மற்றும் கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது.
இந்தக் வரலாற்று மர்மத்தை தான் கல்கி தன்னுடைய பொன்னியின் செல்வன் வரலாற்றுப் புதினத்திற்கான கதைக்களமாகத் தேர்ந்தெடுத்தார். அதே போல ஆதித்த கரிகாலரின் கொலை சம்பத்தை சுற்றி நடக்கும் அரியணை ஆட்டமாக தான் இந்த கொற்றவை மகள் புதினமும் பயணிக்கிறது. பொன்னியின் செல்வனின் நான்காம் பாகமான மணிமகுடத்தின் ஆதித்த கரிகாலர் கொலை சம்பவத்தில் இருந்து தொடங்கும் இந்த கொற்றவை மகள் புதினம் வந்தியத்தேவன் சிறை பிடிப்பு, கொற்றவை மகள் வருகை, பூங்குழலியின் இலங்கை பயணம், நந்தினியின் சூழ்ச்சி, குந்தவையின் திட்டம், வளையாபதியின் சாகசம், ஆழ்வார்கடியனின் மதுரை விஜயம், இலங்கை மன்னனின் முற்றுகை, சேர மன்னனின் பயிற்சி பட்டறை, ஒற்றனின் கொலை மற்றும் சோழர்களின் போர் என்று நீள்கிறது.
லாந்தர் வெளிச்சத்தில் வியர்க்க விருவிருக்க செக்கோடி தெற்காலே இருந்த ஒத்தையடி பாதையில் வெறிக் கொண்டு மட்டு Read More...
Are you sure you want to close this?
You might lose all unsaved changes.
The items in your Cart will be deleted, click ok to proceed.