“நான் என்ன தவறு செய்தேன் கிருஷ்ணா. என் அறிவுக்கு எட்டிய வரை நான் யாருக்கும் எந்த சூழ்நிலையிலும் என் மனதார கூட தீங்கிழைக்க நினைக்கவில்லையே. அப்படியிருக்க நீ வந்து என்னை எச்சரிக்கும்படி என்ன நடந்தது?”.
“என்னகர்ணா இப்படி ஒன்றுமே தெரியாதது போல் கேட்கிறாயே? உன்னால் தான் இந்த பூமியிலே மிகப்பெரிய பிரளயம் ஒன்று நடந்தேற போகின்றது. உன் வீரத்தின் மேல் கொண்ட நம்பிக்கையினால் துரியோதனன் ஒரு பெரிய யுத்தத்திற்கு தயாராகிறான். யுத்தம் ஒன்று நடந்தால் அதில் பலியாகபோகும் உயிர்கள் எத்தனைஎன்பது நீ அறியாததா? எதற்காக, யாருக்காக வேண்டி இந்த யுத்தம்நடக்கப்போகிறது என்பதை இன்னும்மா நீ அறியவில்லை?”.
“கிருஷ்ணா யுத்தம் நடந்தால் உயிர் பறிபோவது இயற்கைதானே. மேலும் நாட்டிற்காக போரிட்டு வீரமரணம் அடைவது எப்பேர்பட்ட பெருமை வாய்ந்த விஷயம்”.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners