Share this book with your friends

Matchless love "Our Sorrow became His sorrow" / இணையில்லா அன்பு “நமது கதறல் அவருடைய கதறலானதே”! இருபத்தி இரண்டாம் சங்கீதத்தின் வெளிப்பாடுகள்/ Revelations from Psalm 22

Author Name: Dr. Shilpa Germaine Alfred | Format: Paperback | Genre : Religion & Spirituality | Other Details

"என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?" என்பது கொல்கொதாவில் கல்வாரி மலையில், சிலுவையில் அறையப்பட்ட நமது இரட்சகரால் எழுப்பப்பட்ட ஆத்துமாவைப் பிழியும் ஒரு கூக்குரல் ஆகும். கர்த்தராகிய இயேசு இதைச் சொல்வதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே, தாவீது ராஜா பெலிஸ்திய ராட்சதனான கோலியாத்தைக் கொன்று, அவன் தலையைத் துண்டித்து எருசலேமுக்கு வெளியே (கொல்கொதா - கபால ஸ்தலம் என்று நம்பப்படுகிறது) புதைத்தான். இந்த புகழ்பெற்ற மேய்ப்பனாகிய ராஜா இதே வசனத்தையும், மேசியா சிலுவையில் அறையப்பட்டதைப் பற்றிய மேலும் பல குறிப்பிட்ட வசனங்களையும் முன்னதாகவே தீர்க்கதரிசனம் உரைத்தான் (சங்கீதம் 22). சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு, ஏசாயா தீர்க்கதரிசி, தேவ ஆவியால் ஏவப்பட்டு, மேசியாவின் வாழ்க்கை மற்றும் மரணத்தைப் பற்றிய  விவரங்களைத் தீர்க்கதரிசனமாக உரைத்தான் (ஏசாயா 53). இந்தத் தீர்க்கதரிசனங்களின் ஒவ்வொரு “எழுத்தும், எழுத்தின் உறுப்பும்” பரிபூரணமாக நிறைவேறின

இந்தப் புத்தகம் ஆசிரியரின் அசல் ஆங்கிலப் புத்தகமான "சங்கீதங்களின் சாரம்: பகுதி 1" -இல் இருந்து  எடுக்கப்பட்ட ஒரு பகுதி மட்டுமே, இது மொத்தம் பன்னிரண்டு சங்கீதங்களிலிருந்து  மூன்று  வருட காலப்பகுதியில் எழுதப்பட்ட சிந்தனையைத் தூண்டும் ஆய்வாகும். இந்த புத்தகம் தீர்க்கதரிசனங்களின் பிரத்தியேகங்களையும், ""முடிந்தது!"" என்ற அவருடைய வார்த்தையின் தாக்கத்தையும்  விரிவாக விளக்குகிறது. இது மிகவும் பெரிய இரட்சிப்பைப் பற்றிய ஆழமான புரிதலையும், முழுக்கு ஞானஸ்நானம் பற்றிய கருத்தையும், மனுகுலத்திற்காக அவர் அனுபவித்த சரீர மற்றும் ஆத்தும  வலியின் ஆழத்தையும், சிலுவை மரணத்தையும், பரிசுத்த திருவிருந்தையும்,  எலும்புகளைப் பாதுகாப்பதில் யூத பழக்கவழக்கங்களைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகளையும், அவருடைய ஆடைகள் பங்கிடப்பட்டதையும், வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்குள்ளும் அருகிலும் ராட்சதர்கள் தொடர்ந்து பரவுவதற்கான காரணத்தையும்,  அத்துடன் ""பாசன் தேசத்துப் பலமான எருதுகள், சீற்றம் மற்றும் பீறிக் கெர்சிக்கிற சிங்கங்கள் மற்றும் நாய்கள்"" ஆகியவற்றைத் தேவனுக்கு  எதிராக தங்கள் இருதயங்களைத் திருப்பும் பல்வேறு வகை மக்களுடன் தொடர்புப்படுத்தும் பரிசுத்த வேதாகம வரலாற்றுக் கணக்குகள் ஆகியவற்றைப் பற்றிய ஆழமான புரிதலை இது வழங்குகிறது. இறுதியாக, தேவனுடைய பிள்ளைகளாகிய நாம், நம்மீது அவர் வைத்திருக்கும் அன்பின் அஸ்திபாரத்தின் மீது ஸ்தாபிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை இந்த நூல் அழுத்தமாகக் கூறுகிறது.  தொடர்ந்து வாசியுங்கள்... தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக!

Read More...
Paperback
Paperback 199

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

டாக்டர். ஷில்பா ஜெர்மைன் ஆல்ஃபிரெட்

தொழிலளவில், ஷில்பா ஒரு மருத்துவர். பெரு நிறுவனத்தில்  வேலை மற்றும் நல்ல சம்பளத்தை விட வாழ்க்கையில் இன்னும் அதிகம் இருக்கிறது என்பதைத் தேவனுடைய நற்குணமும் இரக்கமும் அவர்களை உணர வைத்தது. புற்றுநோயியல் துறையில் (அதன் அனைத்து உணர்ச்சி துயரங்களையும் கண்ணராக் கண்டு) ஐந்து வருடங்கள் செலவழித்து, வாழ்க்கையின் சவால்களை எதிர்கொண்ட அவர், "தேவனுடைய வார்த்தையையே" தனது இறுதி ஆறுதலாகக் கண்டார். அவருக்கும், அவருடைய கணவர் மருத்துவர் ஆல்ஃபிரட் அவர்களுக்கும், இரண்டு அழகான தேவபக்தியுள்ள பிள்ளைகளைத் தேவன் கிருபையாக கொடுத்திருக்கிறார். கடந்த பதினைந்து ஆண்டுகளாகப் பரிசுத்த ஆவியானவரின் வழிகாட்டுதலின் கீழ் தேவனுடைய வார்த்தையைத் தீவிரமாக ஆராய்ந்தறியும் மாணவியாக  இருந்து வருகிறார். "சிறிய தொடக்கங்களின் நாளை ஒருபோதும் இகழக்கூடாது" என்று அவர் உறுதியாக நம்புகிறார்!   

Read More...

Achievements

+2 more
View All