You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Pal“இசை ரசனை மக்களிடத்தே மாறுகிறபோது,அங்கே கலாச்சாரம் மாறக்கூடும்”, 2300 வருடங்களுக்கு முன்பாக தன் உள்ளுணர்வின் மூலம் இச்சிந்தனையை தருவித்துள்ளார் பெருமகனார் அரிஸ்டாட்டில். ”உன்னை அறிந்தால்” இவ்வுலகம் உன் வசப்படும், என்று உரைத்துள்ளார் அரிஸ்டாட்டிலின் ஆசிரியரான சாக்ரடீஸ், ஆட்சி செய்பவன் “தத்துவஞானியாக” அமைந்தால் நாட்டிற்கு சிறப்பு என்று எடுத்துரைத்துள்ளார் பிளாட்டோ. இவ்வுலக மக்கள் “எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க பெற வேண்டும்” என அரை கூவல் விடுத்துள்ளார் “கேப்பிட்டல்” எழுதியுள்ள மார்க்ஸ். ”நாகரீக வளர்ச்சியானது மனிதத்தை அழிக்கக் கூடிய கருவியாக விளங்குகிறது என சாடுகிறார் “சமூக ஒப்பந்தம்” அருளிய ரூசோ.இவ்வாறான சிந்தனையோட்டங்கள், மனிதர்களை மட்டுமல்லாது, உலக சமூக பொருளாதார அரசியல் அமைப்புகளையும் செம்மைப்படுத்தியுள்ளது. பல்வேறு சிந்தனைகளின் தொகுப்பாக உருவாகியுள்ள இப்படைப்பு, அறநெறி மாற்றுச் சிந்தனைகள் மாணவரிடத்தே பிறப்பதற்கும், மாற்றங்களை ஏற்படுத்துவதற்கும் உருவாக்கப்பட்டுள்ளது. திருக்குறள், அர்த்தசாஸ்த்திரம் போன்ற வியக்கத்தக்க கிழக்கத்திய சிந்தனைகள் இருந்தபோதிலும், மேற்கத்திய சிந்தனைகள் பல பாடங்கள் தனித்தன்மையாக உருவாவதற்கு காரணகர்த்தாவாக விளங்கியதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. மாணவ சமூக அறிவு தேடலுக்கும், வேலை வாய்ப்புக்கும் இப்படைப்பு பயனளிக்கக்கூடும் என நம்பப்படுகிறது.
It looks like you’ve already submitted a review for this book.
Write your review for this book (optional)
Review Deleted
Your review has been deleted and won’t appear on the book anymore.முனைவர்.கு.செந்தில்குமார், முனைவர்.க.பிரபு, முனைவர்.ச.அருண்குமார்
கு.செந்தில்குமார் தற்சமயம் அழகப்பா பல்கலைகழகத்தில் அரசியல் & பொது நிர்வாக துறையில் இணை பேராசிரியராக பணியாற்றி கொண்டிருக்கிறார். பல ஆராய்ச்சி கட்டுரைகளை பான்னாட்டளவில் பிரசுரித்த இவர் சமீபத்தில் ஜோஹன்னஸ்பர்க் பல்கலைகழகத்தில் தனது ஆராய்ச்சி கட்டுரையை சமர்பித்துள்ளார். பன்னாட்டு உறவுகள்,மனித உரிமைகள் போன்ற பிரத்யோக பாடங்களில் தற்சமயம் கவனம் செலுத்தி வருகிறார்.
க.பிரபு விவேகானந்தா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், அரசியல் அறிவியல் துறைத் தலைவராகப் பணியாற்றி வருகின்றார். அண்ணாமலை பல்கலைகழகத்தில் ஒருங்கிணைந்த முதுகலை, இளமுனைவர், மற்றும் முனைவர் பட்டமும் பெற்றிருக்கின்றார். முனைவர் பட்ட ஆராய்ச்சியில் பட்டியல் இன மாணவர்களின் அடிப்படை கல்வி மேம்பாடு பற்றி ஆராய்ந்துள்ளார். பல ஆராய்ச்சி கட்டுரைகளை தேசிய கருத்தரங்குகளில் கலந்துகொண்டு வழங்கி இருக்கின்றார்.
ச.அருண்குமார் விவேகானந்தா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அரசியல் அறிவியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரியில் முதுகலை பட்டத்தில் பல்கலைக்கழக அளவில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். ஆராய்ச்சி படிப்பில் தீவிரவாதம் மற்றும் இந்திய நாட்டின் பாதுகாப்பு குறித்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார். பல்வேறு சர்வதேச இதழ்களுக்கு ஆராய்ச்சி கட்டுரைகளை எழுதியுள்ளார்.
The items in your Cart will be deleted, click ok to proceed.