You cannot edit this Postr after publishing. Are you sure you want to Publish?
Experience reading like never before
Sign in to continue reading.
"It was a wonderful experience interacting with you and appreciate the way you have planned and executed the whole publication process within the agreed timelines.”
Subrat SaurabhAuthor of Kuch Woh Pal1920 களில் சிந்து சமவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டபோது, அது முழு இந்திய துணைக் கண்டத்திற்கும் மகிழ்ச்சி மற்றும் கொண்டாட்டத்திற்கான நிகழ்வாக இருந்தது. ஆனால் இந்திய சுதந்திரத்துடன் இந்தியப் பிரிவினையும் வந்தது. புகழ்பெற்ற மொஹென்ஜோ-தரோ மற்றும் ஹரப்பா ஆகிய இரண்டு நகரங்களும் பாகிஸ்தானின் ஒரு பகுதியாக மாறியது. வரலாறும் புவியியலும் ஒன்றாக படைத்ததை , மனிதன் தனது அறிவீனத்தாலும் தந்திரத்தாலும் இரண்டாகப் பிரித்துவிட்டான்... சிந்து சமவெளி நாகரிகத்தின் சிறப்பான இரண்டு நகரங்களும் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு சென்றுவிட்டது... இது இந்திய குடிமக்களுக்கு, குறைந்தபட்சம் வரலாற்று அறிவும் பெருமிதமும் வய்க்கப் பெற்ற குடிமக்களுக்கு மிகவும் வருத்தம் அளித்தது.வரலாறு ஒரு கதவை மூடும்போது, மற்றொரு கதவை திறந்து வைக்கிறது.. 1950கள் தொடங்கி இந்திய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் சிந்து சமவெளி நாகரிகம் இருக்கக் கூடிய சாத்தியமான இடங்களை தோண்டி எடுக்க கடுமையாக உழைத்தனர். அவர்கள் உழைப்பு வீணாகவில்லை.. சிந்துநாகரிகத்தின் பல முக்கிய தளங்கள் தோண்டப்பட்டன. அவற்றில் சில சிந்து நாகரிகத்தின் அசல் இரட்டை நகரங்களை1[1]" விட பெரியவை மற்றும் செழிப்பானவை..ஆயினும் சிந்து சமவெளி நாகரீகத்தின் மொகஞ்சதாரோவின் சிறப்புக்கும் செழிப்பிற்கும் இணையில்லை என்பதையும் மறுக்க இயலாது. எடுத்துகாட்டாக அங்கு கிடைத்த நடனப் பெண்னின் சிலை போன்ற செப்புச்சிலை வேறு எந்த் இடத்திலும் கிடைக்கவில்லை. அதைப் போலவே பெரியமனிதனின் சிலையும்( பூசாரி / அரசன்/ பெருந்தகை) வேறு எங்கும் கிடைக்கவில்லை. சிந்து நாகரீகத்தின் இந்தியத் தளங்கள் பல உள்ளன.அவற்றில் சிலவற்றைப் பற்றி இந்த நூலில் காண்போம்.
[
It looks like you’ve already submitted a review for this book.
Write your review for this book (optional)
Review Deleted
Your review has been deleted and won’t appear on the book anymore.துரை இளமுருகு
தமிழ்நாட்டில் உள்ள திருச்சிராப்பள்ளியில் வசிக்கும்எழுத்தாளர் துரை இளமுருகு (து. இளமுருகன் என்றும் அழைக்கப்படுபவர்) ஒரு வெற்றிகரமான எழுத்தாளர்.தன்னுடைய உண்மையைத்தேடும் வேட்கையை பல நூல்களைக் கறபதன் வழி தீர்ப்பதோடு தான் கற்றதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் இவர் கண்ட வழி எழுத்து ஆகும். மக்களின் பார்வையில் செய்திகளைக் கண்டுஅதைப் பகிர்ந்து கொள்வதிலும் எந்த ஒரு செய்திக்கும்மறுபக்கம் உண்டு என்ற நம்பிக்கையுமே இவர் எழுத தூண்டு கோலாகும். இதுவரை 10க்கும்மேற்பட்ட தமிழ் நூல்களையும் 5 ஆங்கில நூலகளையும் எழுதியுள்ள இவருக்கு சான்றுகளுடன் கட்டுரை நூல்களை எழுதுவதில்தான் விருப்பம். வெறும் கற்பனயாய் கதைப்பது பயன் தராது என்பது இவரின் ஆழமான நம்பிக்கை. இவரின்1) ராஜராஜ சோழனின் மறுபக்கம், 2)கரிகாலன் கட்டிய கல்லணை? 3)தொல்காப்பியம் மெய்யும் பொய்யும், 4)சிந்து முதல்காவிரிவரை ஆகிய நூல்கள் சிறந்தமுறையில் விற்பனை ஆகிக் கொண்டுள்ள
The items in your Cart will be deleted, click ok to proceed.