இவ்வுலகில் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இயற்கை விவசாய முறைகளை பின்பற்றி வந்த நாம், கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் இரசாயன விவசாயத்திற்கு பெருமளவில் மாறிப்போனதால் பல்வேறு அபாய நோய்களுக்கும், ஆரோக்கிய குறைபாடுகளுக்கும் ஆளாகி வருகிறோம். நாம் வாழும் பூமியை சிறிதும் சிதைக்காமல் சீரழிக்காமல் சிறப்பாக விவசாயம் செய்வதற்கு நஞ்சில்லா வேளாண்மை முறைகள் நமக்கிருக்கின்றன. மனித நலன் நம் நாட்டின் முக்கிய குறிக்கோளாக கருதப்பட்டு வரும் இந்த காலகட்டத்தில், மனித நலன்களை பேணுவதற்கு நஞ்சற்ற தரமான உணவினை அனைவருக்கும் கிடைக்கச் செய்ய வேண்டியது அத்தியாவசிய கடமையாகிறது. இதனை வலியுறுத்தி நஞ்சில்லா விவசாய முறைகளை எல்லோரும் எளிதில் கடைபிடிக்கும் விதத்தில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.
நமது நாட்டு மக்களிடையே நஞ்சில்லா வேளாண்மை குறித்த விழிப்புணர்வு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. அதோடு நஞ்சில்லா விளைபொருட்களின் தேவை சர்வதேச சந்தையில் மிகவும் பெருகிவருகிறது. ஆகவே நஞ்சில்லா விவசாயத்தை மேற்கொள்ளுவது மிகவும் அவசியமாகத் தெரிகிறது. இந்த மாற்று விவசாய முறை நமது நீடித்த நிலைத்த விவசாய வளர்ச்சிக்கு உத்திரவாதம் தருகிறது. நமது மண்ணுக்கு வரம்பு மீறி பரிமாறப்பட்ட இரசாயன விருந்துகளினால் மண் மலடாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இவற்றைச் சரிசெய்ய நஞ்சில்லா வேளாண்மை தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. அவை அனைத்தும் இந்நூலில் தெளிவாக தொகுக்கப்பட்டுள்ளன. இனிமேல் இயற்கையோடு கரம் கோர்த்து நஞ்சில்லா தொழில்நுட்பத்தில் வேளாண்மை செய்ய இந்நூல் நிச்சயம் உதவும்.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners