Share this book with your friends

THILLAIK KOVILUM DIKSTHARKAL THOLLAIYUM / தில்லைக் கோவிலும் தீட்சிதர் தொல்லையும்

Author Name: Durai Ilamurugu | Format: Paperback | Genre : History & Politics | Other Details

இந்துமதம் அடிப்படைவாதம் தலைதூக்கி வரும் காலமிது. இந்துமத மீட்பு  அல்லது கோவில் மீட்பு என்பதன் பொருள் வழக்கொழிந்து போன நால்வகைப் பகுப்புமுறையை மீட்டுக் கொணர்ந்து பார்ப்பனஆதிக்கத்தைநிலை நாட்டுவதேயாகும்.அதன் தொடக்கமாகத்தான் அரசு இந்துக் கோவில்களில் இருந்து வெளியேற வேண்டும் என்ற முழக்கமும்  எழுகிறது. அரசு வெளியேறினால் என்னவாகும் என்று  நாம் கற்பனை செய்து பார்க்க வேண்டியதில்லை. தில்லைக் கோவிலில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகளைக் கவனித்து வந்தால் போதுமானது' சென்ற நூற்றாண்டு வரை கோவில்களைக் கொள்ளைக் கூடாராமாக்கி சுரண்டிக் கொழுத்த பார்ப்பன மேல்சாதி வகுப்பினர் தமது சமூக மேலாண்மயை மீண்டும் நிலை நாட்ட முயல்கின்றனர். தமிழ் பாடுவதற்கான அரசாணையாக இருக்கட்டும், கோயிலை அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்ததாக இருக்கட்டும் இரண்டையுமே திமுக அரசுதான் செய்தது. அரசியல் கட்டாயத்திற்காக செய்தது என்றாலும் ஏதோ ஒருவகையில் செய்தது .ஆனால் அதன் பிறகு எதையும்  செய்யவில்லை என்பதும் உண்மை.இனிமேலாவது செய்யுமா என்பதுதான் கேள்வியே!

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

Also Available On

துரை இளமுருகு

தமிழ்நாட்டில் உள்ள திருச்சிராப்பள்ளியில் வசிக்கும்எழுத்தாளர் துரை இளமுருகு (து இளமுருகன் என்றும் அழைக்கப்படுபவர்) ஒரு வெற்றிகரமான  எழுத்தாளர்.தன்னுடைய உண்மையைத்தேடும் வேட்கையை பல நூல்களைக் கற்பதன் வழி தீர்ப்பதோடு தான் கற்றதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும் இவர் கண்ட வழி  எழுத்து ஆகும். மக்களின் பார்வையில் செய்திகளைக் கண்டுஅதைப் பகிர்ந்து கொள்வதிலும், எந்த ஒரு செய்திக்கும் மறுபக்கம் உண்டு என்ற நம்பிக்கையுமே இவர் எழுத்ததூண்டு கோலாகும். இதுவரை 10க்கும்மேற்பட்ட தமிழ் நூல்களையும் 5 ஆங்கில நூலகளையும்  எழுதியுள்ள இவருக்கு  சான்றுகளுடன் கட்டுரை நூல்களை எழுதுவதில்தான் விருப்பம். வெறும் கற்பனயாய் கதைப்பது பயன் தராது என்பது இவரின் ஆழமான நம்பிக்கை. இவரின்1) ராஜராஜ சோழனின் மறுபக்கம், 2)கரிகாலன் கட்டிய கல்லணை? 3)தொல்காப்பியம் மெய்யும் பொய்யும், 4)சிந்து முதல்காவிரிவரை ஆகிய நூல்கள்  சிறந்தமுறையில் விற்பனை ஆகிக்கொண்டுள்ளன.

Read More...

Achievements

+9 more
View All