50கேஜி தாஜ்மகால்
புகழின் உச்சியில் இருக்கும் இளம் பரதநாட்டிய தாரகை ஜோதிகாவுக்கு வரும் ஒரு தொலைபேசி அழைப்பு ,அமையப் போகும் அவளின் திருமண வாழ்க்கைக்கு ஒரு பூதாகரமான பிரச்சனையை அழைத்துக்கொண்டு வருகிறது. இதனால் அவள் நிம்மதி இழக்கிறாள்.இந்நிலையில் காத்திருக்கும் விபரீதம் அறியாமல் ஜோதிகா ஒரு கலாச்சார நிகழ்விற்காக கலைத்துறை அமைச்சரை காண ஆக்ரா செல்கிறாள்.அங்கு முன்பிருந்த பிரச்சனையுடன் இன்னொரு விபரீதமும் சேர்கிறது. இதனிடையே ஜோதிகாவைத் தேடி அவளைத் திருமணம் செய்யப் போகும் ராகவ்வும் ஆக்ரா வருகிறான். அங்கு நடக்கும் எதிர்பாரா நிகழ்வுகள் ஜோதிகாவையும் ராகவ்வையும் அதிர வைக்கின்றன.
அபாய நோயாளி
இரண்டு கிளை கொண்ட கதை
முதல் கதை
ஷ்ரேயாவை மணம்முடிப்பதற்காக வெளிநாட்டில் இருந்து வரும் பரணியை வரவேற்க விமான நிலையத்தில் காத்திருக்கிறது அவன் குடும்பமும் ஷ்ரேயா குடும்பமும். ஆனால், விமானம் தரை இறங்கும் முன்னேமே பரணிப் பற்றிய ஒரு அதிர்ச்சி செய்தியால் நிலைகுலைகிறார்கள். அதன் பின்னணி என்ன என்பது புரியாமல் தவிக்கிறார்கள்.தீர்வுக்காக மருத்துவர்களும், காவல் துறை அதிகாரிகளும் களம் இறங்குகிறார்கள். ஆனால், நேரம் செல்ல செல்ல பிரச்சனைகள் மேலும் கிளைவிட சூழல் இன்னுமும் குழப்பமாக மாறுகிறது.
இரண்டாவது கதை
உடல்நிலை குன்றிய மனைவி மனோரஞ்சிதத்திற்கு கணவன் சுபாஷ் உறுதுணையாக இருக்கிறான். சுபாஷ் வெளியூர் செல்கையில் தன்னை கவனித்துக் கொள்வதற்காக திலகா என்ற பெண்ணை வேலைக்கு எடுக்கிறாள் மனோரஞ்சிதம். அங்கிருந்து வீட்டில் உள்ள அனைவருக்கும் சிறு சிறு பிரச்சனைகள் முளைவிட ஆரம்பிக்கின்றன.ஏன்.. எப்படி என தெரிவதற்குள் ஒரு பெரும் விபரீதம் நடக்கிறது. காவல்துறை விசாரணையை முடுக்குகிறது.யார் குற்றவாளி என அனைத்து திசைகளிலும் சாட்டையைச் சொடுக்குகிறது.
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners