Share this book with your friends

VELVET KUTRANGAL / வெல்வெட் குற்றங்கள்

Author Name: RajeshKumar | Format: Paperback | Genre : Literature & Fiction | Other Details

வெல்வெட் குற்றங்கள்... 

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் காணாமல் போனதன் பின்னணியில் எழுதப்பட்ட ஒரு க்ரைம் நாவல். 

காணாமல் போன விமானம் பற்றிய முக்கிய தகவல்களை இந்தியத் தூதரகத்தின் தனி நபர் ஒருவர் பெறும்போது சங்கிலித் தொடராக குற்றங்கள் நடக்கின்றன. 

உலகெங்கும் உள்ள வெவ்வேறு குழுக்கள் ,அதிகாரப்பூர்வமான மற்றும் அதிகாரப்பூர்வமற்ற முறையில், அந்த நிகழ்வு தொடர்பான வகைப்படுத்தப்பட்ட இரகசிய சங்கேத வார்தைகளை மற்றும் குறியீடுகளை அபகரிக்க முயற்சிக்கின்றன. ஏன்...?

அந்த விமானத்திற்கு என்னதான் நேர்ந்திருக்கும்...அதன் கதி என்ன? 

இதுவரைக்கும்  

உறுதியான இறுதியான ஆதாரங்கள் எதுவும் மக்கள் பார்வைக்கு கிடைக்கவில்லை. 

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அது கடலில் மூழ்கியதா அல்லது பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டதா அல்லது ஒரு திணிககப்பட்ட தற்கொலை முயற்சியா?  

என்ன நடந்திருக்கலாம்...?

எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் கற்பனையில் இருந்து உருவான ஒரு தலைசிறந்த க்ரைம் த்ரில்லர் நாவல்.

Read More...

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Sorry we are currently not available in your region.

Also Available On

ராஜேஷ்குமார்

ஆர்.கே. என்னும் இந்த இரண்டு எழுத்துக்களுக்குள் அடங்கியிருக்கும் ராஜேஷ்குமார் என்னும் எழுத்தாளர் 1969ம் ஆண்டு தன்னுடைய 21 வயதில் எழுத ஆரம்பித்து 2019ல் தன்னுடைய எழுத்துலக வாசத்தின் 50வது ஆண்டாய் முடித்துக் கொண்டு இன்னமும் எழுதிக்கொண்டு இருப்பவர்.

1947-ம் ஆண்டு மார்ச் 20ம் தேதி பிறந்த இவர்க்கு பெற்றோர் இட்ட பெயர் ராஜகோபால். தாத்தாவின் பெயரான குப்புசாமியையும், அப்பாவின் பெயரான ரங்கசாமியையும் தன்னுடைய பெயரோடு இணைத்துக்கொண்டதின் காரணமாய் பள்ளி மற்றும் கல்லூரிகளில் சக மாணவர்களால் கே.ஆர்  என்று அழைக்கப்பட்டவர்.

பி.எஸ்ஸியில் தாவரவியலையும் பி.எட்டில் நேச்சுரல் சயின்ஸையும் முடித்து ஐந்தாண்டு காலம் ஆசிரியராய் பணி புரிந்த பிறகு அந்தப் பணியை ராஜினாமா செய்துவிட்டு அப்பாவுடன் இணைந்து கைத்தறிச்சேலை வியாபாரத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர்.  அதை கவனித்தபடியே கதைகள் எழுதியவர். 1973 முதல் 1980 வரை தன்னுடைய வியாபார விஷயமாக மாதம் ஒரு முறை இந்தியாவின் வடமாநில நகர்களுக்கு சென்று வந்ததின் விளைவாகவும் பலதரப்பட்ட மக்களையும், நிகழ்வுகளையும் சந்தித்ததின் பயனாகவும் பல கதைகள் அவர் மனதிலே உருவாகி சிறுகதைகளாகவும், நாவல்களாகவும் பல்வேறு நாளிதழ்களிலும் வார இதழ்களிலும் வெளிவந்தது.

Read More...

Achievements

+8 more
View All