கண்ணசைவில் காதல் கொள்ளும் இரு மனங்களின் காதலை சொல்லும் கதை.. நாயகியான தமிழினியை உயிராய் நேசிக்கும் நாயகன் மித்ரன்..
நாயகிக்கு வரும் புரியாத புதிரான கனவு.. அந்த கனவுக்கான காரணம் என்ன? நாயகியை ஒருதலையாய் காதலிக்கும் வில்லன்.. அதனால் ஏற்படும் சிக்கல்..
யுகங்களாய் தொடரும் ஒரு காதல் பகை! அந்த பகை என்னவென அறிய ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மகத தேசம் செல்கிறது.. அங்கு உதிக்கும் தூய்மையான காதல்... இரு நண்பர்களின் நட்பு.. பேரரசு.. ராஜ்ஜியம்.. போர்.. என பழங்காலத்தை கண்முன்னே காட்டும் கதை..
எதிர்பாரா நேரத்தில் நடக்கும் நாயகியின் கடத்தல் திருப்பம்.. இத்தனை கஷ்டத்தையும் தாண்டி தன்னவளை கைப்பிடித்தானா மித்ரன்? என்பதை கலைநயத்தோடு சொல்லும் ஒரு காதல் கதைதான் என் விழியின் கனவு..
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners